நிகழ்வு-செய்தி

'தித்வா' புயலால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப கடற்படை பங்களிப்பு செய்கிறது

'தித்வா' புயலால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீள கட்டியெழுப்புவதற்காக பங்களிக்கும் இலங்கை கடற்படை, தற்போது பதுளை மற்றும் பசரை கல்வி வலயங்களில் சேதமடைந்த பாடசாலைகளில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

29 Dec 2025

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களனி ரஜமஹா விஹாரையில் விசேட மத நிகழ்வு

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேவை திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்தது. இதன் கீழ், கடற்படையிற்கும் தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆசிர்வாதம் பெறுவதற்காக 2025 டிசம்பர் 27 ஆம் திகதி கடற்படைத் தளபதியின் தலைமையில் களனி ராஜமஹா விஹாரையில் ஒரு சிறப்பு மத நிகழ்வு நடைபெற்றது.

29 Dec 2025

கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலி முகத்திடல் கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மேற்கு கடற்படை கட்டளை கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் 2025 டிசம்பர் 27 ஆம் திகதி காலி முகத்திடல் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வானது நடத்தப்பட்டது.

28 Dec 2025

கடற்படை மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் நிஷாந்த ரணவீர கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த ரியர் அட்மிரல் நிஷாந்த ரணவீர இன்று (2025 டிசம்பர் 25) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

25 Dec 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை தீவு முழுவதையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ், புத்தளம், குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், பாடசாலை பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க கடற்படையின் உதவியானது 2025 டிசம்பர் 19 அன்று வழங்கப்பட்டது.

24 Dec 2025

'தித்வா' புயலால் சேதமடைந்த பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப கடற்படை “நென திரி மெஹெயும” க்கு பங்களிப்பு செய்கிறது

'தித்வா' புயலால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீள கட்டியெழுப்புவதற்காக, ஊவா மாகாண கல்வி அமைச்சினால் 2025 டிசம்பர் 20 முதல் 27 வரை ஒரு வாரத்திற்கு செயல்படுத்தப்பட்ட “நென திரி மெஹெயும” க்கு பங்களிக்கும் இலங்கை கடற்படை, தற்போது பதுளை மற்றும் மஹியங்கனை கல்வி வலயங்களில் சேதமடைந்த பாடசாலைகளில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

24 Dec 2025

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மருத்துவ மற்றும் பல் மருத்துவ முகாமானது நடாத்தப்பட்டது

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இதன் கீழ், கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக, 2025 டிசம்பர் 23 அன்று யாழ்ப்பாணம், பலாலி அரசு தமிழ் கலப்புப் பாடசாலையில் கடற்படையால் ஒரு சிறப்பு நடமாடும் மருத்துவ மற்றும் பல் மருத்துவ முகாமானது வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

24 Dec 2025

கடற்படை மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் ருவான் கலுபோவில கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த ரியர் அட்மிரல் ருவான் கலுபோவில இன்று (2025 ஆகஸ்ட் 23) கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

23 Dec 2025

கடற்படை வீரர்களுக்கான நலன்புரி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக கட்டப்பட்ட விடுமுறை விடுதிகள் திறக்கப்பட்டன

இலங்கை கடற்படையின் கனிஷ்ட அதிகாரிகளுக்கும் மாலுமிகளுக்கும் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக, தியத்தலாவ கடற்படை விடுமுறை விடுதி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட கனிஷ்ட அதிகாரிகளின் விடுமுறை விடுதி மற்றும் பயிற்சி மாலுமிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட விடுமுறை விடுதி ஆகியவை 2025 டிசம்பர் 22 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

23 Dec 2025

“தித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட தொலுவ பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் மருத்துவ உதவி

2025 டிசம்பர் 20 அன்று, தொலுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கலைவானா கல்லூரியில் தங்கியுள்ள தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மனிதாபிமான உதவித் திட்டத்துடன் இணைந்து நடத்தப்பட்ட சுகாதார முகாமுக்கு கடற்படை மருத்துவ உதவியை வழங்கியது.

22 Dec 2025