நிகழ்வு-செய்தி
வழங்கல்கள் மற்றும் சேவைகளுக்காக மின்னணு கொள்முதல் முறையைச் இலங்கை கடற்படை செயல்படுத்துகிறது
மின்னணு அரசாங்க கொள்முதல் (Electronic Government Procurement - e-GP) முறையைச் செயல்படுத்தும் முன்னெடுப்புகளுக்கு இணங்க, கடற்படை வழங்கல்கள் மற்றும் சேவைகள் தொடர்பான மின்னணு கொள்முதல் முறையைச் செயல்படுத்துவதைக் குறிக்கும் வகையில், இலங்கை கடற்படையினரால் செயல்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டம் குறித்த ஒரு சிறப்புக் கலந்துரையாடல், 2026 மார்ச் 13 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் வழங்கல்கள் மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் நடைபெற்றது.
24 Mar 2026
இலங்கை பாதுகாப்பு தூதுக்குழு ஜப்பானில் உயர்மட்ட சந்திப்புகளில் மேட்கொண்டது
இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு தூதுக்குழு, 2ஆம் ஜப்பான்–இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தைத் மேட்கொண்டது. இந்த முக்கிய நிகழ்வு, குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான நீண்டநாள் நட்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
20 Mar 2026
GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சிறப்புத் தூதுவர் கோர் சந்தித்தார்
எமது நீண்டகால கடல்சார் பங்காண்மையின் வலிமையினை அடையாளப்படுத்தும் வகையில் தற்போது இலங்கை கடற்படையில் சேவையிலீடுபட்டுள்ள முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான SLNS GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சிறப்புத் தூதுவர் கோர் சந்தித்தார். இலங்கையை வந்தடைவதற்காக பசிபிக் சமுத்திரத்தினூடாக தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் நான்காவது முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான ex-DECISIVE எமது கடல்சார் பாதுகாப்புப் பங்காண்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்தும்.
20 Mar 2026
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் “JMSDF OONAMI” தீவை உத்த்யோகப்பூர்வ விஜயத்தை முடித்துவிட்டு தீவிலிருந்து புறப்படுகிறது
ஜப்பானிய கடற்படை தற்காப்புப் படையின் கப்பலான “JMSDF OONAMI” உத்த்யோகப்பூர்வ விஜயத்திற்காக 2026 மார்ச் 09 ஆம் திகதி தீவை வந்தடைந்ததுடன், உத்த்யோகப்பூர்வ விஜயத்தை முடித்துவிட்டு, சேவைத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர், 2026 மார்ச் 11 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட்டது. மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளுக்கு இணங்க குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பிரியாவிடை அழித்தனர்.
18 Mar 2026
உலக உடல் பருமன் தின விழிப்புணர்வு நடைபயணத்தில் இலங்கை கடற்படை பங்கேற்பு
உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு “Healthy Weight – Wealthy Life.” என்ற கருப்பொருளின் கீழ், கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவைச் சுற்றிய பகுதியில் 2026 மார்ச் 07 ஆம் திகதி நடைபெற்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நடைபயணத்தில் இலங்கை கடற்படை கலந்து கொண்டது.
17 Mar 2026
உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ தீவை விட்டு புறப்படுகின்றது
உத்தியோகபூர்வ விஜயத்திற்காக 2026 பிப்ரவரி 27 ஆம் திகதி தீவை வந்தடைந்த, இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 09 மார்ச் 2026 தீவை விட்டு புறப்பட்டதுடன், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
16 Mar 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் வடக்கு மீனவ சமூகம் முன்னிலை வகிக்கின்றன
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழல், சுற்றுலாத் துறை மற்றும் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்படும் பாதகமான தாக்கம் குறித்து வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்களின் தலைமையில், அப்பகுதியில் உள்ள சட்ட அமலாக்க முகவர் மற்றும் வட மாகாண மீனவர் சங்க பிரதிநிதிகளின் பங்கேற்புடன், 2026 மார்ச் 10 ஆம் திகதி வடக்கு நிறுவனத்தில் சிறப்பு நிகழ்ச்சித் தொடர் ஒன்று நடைபெற்றது.
14 Mar 2026
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவியது
அம்பாறையின் பானம பகுதியில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தை அன்மித்த நடமாடிக்கொண்டிருந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க கடற்படை, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு 2026 மார்ச் 10 ஆம் திகதி உதவி வழங்கியது.
14 Mar 2026
படகேருதல், தேடுதல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் குறித்த பிராந்திய பயிற்சி பாடநெறி மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது குறித்த பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்தன
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் மூலம் (United Nations Office on Drugs and Crime - UNODC) திருகோணமலை, சிறப்பு கப்பல் படை தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள படகுகளுக்கான அணுகல், தேடல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் தொடர்புடைய பிராந்திய பயிற்சி பாடநெறி மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது குறித்த பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன், மேலும் சான்றிதழ் வழங்கும் விழா 2026 மார்ச் 06 ஆம் திகதி சிறப்பு கைவினைப் படை தலைமையகத்தில் நடைபெற்றது.
11 Mar 2026
“உலக கண் அழுத்த தினத்தை” முன்னிட்டு கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் ஒரு கண் மருத்துவமனை
மார்ச் 12 ஆம் திகதி வரும் உலக கண் அழுத்த நோய் தினத்தைக் கொண்டாடும் வகையில், கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் கண் அழுத்த நோய் மருத்துவமனை 2026 மார்ச் 03 ஆம் திகதி நடைபெற்றது.
11 Mar 2026


