நிகழ்வு-செய்தி
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS TARANGINI’ 2026 பிப்ரவரி 27 உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படை குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு இணங்க திருகோணமலை துறைமுகத்தில் வரவேற்றனர்.
27 Feb 2026
கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், குருநாகலை மாவட்டத்தின் வாரியபொல பிரதேச செயலகப் பிரிவின் பயவ கிராமத்திலும், அனுராதபுரம் மாவட்டத்தின் கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகப் பிரிவின் கோனுமெருவெவ கிராமத்திலும் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2026 பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் திறந்து வைக்கப்பட்டது.
27 Feb 2026
இலங்கை கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான ‘P628’, அமெரிக்காவின் ‘பால்டிமோர்’ இலிருந்து கொழும்பை நோக்கி புறப்பட்டது
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், 2025 டிசம்பரில் அமெரிக்க கடலோர காவல்படை திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான P 628, இலங்கை கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்ட பின்னர், 2026 பிப்ரவரி 20, அன்று அமெரிக்காவின் மேரிலாந்தின் பால்டிமோரில் உள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் கட்டும் தளத்திலிருந்து கொழும்புக்கு தனது பயணத்தைத் தொடங்கியது.
23 Feb 2026
அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி, கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திய்காக 2026 பிப்ரவரி 19 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் Stephen T. Koehler, இன்று (2026 பிப்ரவரி 20) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
21 Feb 2026
"சமனொல சிறி - பசுமை யாத்திரை” தேசிய திட்டத்திற்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு
“க்லீன் ஶ்ரீ லங்கா” செயலகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட "சமனொல சிறி - பசுமை யாத்திரை” தேசிய திட்டத்தின் கீழ், நல்லதன்னியாவிலிருந்து சிவனொளிபாத மலை வரையிலான சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் குப்பைகளை அகற்றும் திட்டத்திற்கு ஆதரவை வழங்க கடற்படை 2026 பிப்ரவரி 19 அன்று நடவடிக்கை எடுத்தது.
21 Feb 2026
திடீர் தீ விபத்து ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய தயார்நிலை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்த விரிவான தீயணைப்பு பயிற்சி
மரைன் படைப்பிரிவு வீரர்களுக்கு நடத்தப்பட்ட கட்டிட தீயணைப்பு மற்றும் கயிறு மூலம் மீட்பு தொடர்பான சிறப்பு பயிற்சி திட்டம் 2026 ஜனவரி 30 ஆம் திகதி கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படை தீயணைப்பு பயிற்சி பாடசாலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
21 Feb 2026
இலங்கை ஆயுதப்படை மருத்துவ மாணவர்களின் 9 வது வருடாந்திர ஆய்வு அமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை ஆயுதப்படை மருத்துவ மாணவர்களின் 9 வது வருடாந்திர ஆய்வு அமர்வு 2026 பிப்ரவரி 13 முதல் 15 வரை பத்தரமுல்லையில் உள்ள Water’s Edge ஹோட்டலில் இலங்கை ஆயுதப்படை மருத்துவ மாணவர் சங்கத்தின் தலைவர் கடற்படை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஜனக மாரம்பகே ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் ‘Back to Basics: Reinforcing Foundational Readiness in Military Medicine’ என்ற கருப்பொருளில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
16 Feb 2026
ரோயல் ஓமன் கடற்படைக் கப்பல் ‘SADH’ விநியோக மற்றும் சேவை தேவைகளை முடித்த பிறகு தீவிலிருந்து புறப்பட்டது
விநியோக மற்றும் சேவை தேவைகளை மேற்கொள்வதற்காக 2026 பிப்ரவரி 10 ஆம் திகதி தீவை வந்தடைந்த ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘SADH’, 2026 பிப்ரவரி 12 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட்டதுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலுக்கு பிரியாவிடை அழித்தனர்.
13 Feb 2026
வணிகக் கப்பல் பாதுகாப்பு குழுக்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்படை 4 மாதங்களில் 598,250.00 அமெரிக்க டாலர் அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளது
இலங்கை கடற்படை, வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம், வணிகக் கப்பல் பாதுகாப்பு குழுக்களுக்கு (Onboard Security Team - OBST) வசதிகளை வழங்கும் சுயாதீன செயல்பாட்டை 2025 அக்டோபர் 03 அன்று தொடங்கியதுடன், கடந்த நான்கு (04) மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 323 நடவடிக்கைகள் மூலம், நேரடியாக 598,250.00 அமெரிக்க டாலர்களை ஈட்டி, அந்த அந்நியச் செலாவணி வருமானத்தை தேசிய நலனுக்காக வழங்க முடிந்தது. இது தொடர்பான ஊடக சந்திப்பு 2026 பிப்ரவரி 11 அன்று கடற்படை நடவடிக்கைகள் இயக்குநர் ஜெனரலின் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
12 Feb 2026
ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘SADH’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘SADH’ இன்று (2026 பிப்ரவரி 10) விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் மரபுகளுக்கு ஏற்ப கப்பலை வரவேற்றது.
10 Feb 2026


