நிகழ்வு-செய்தி

பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 20 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 20 நபர்கள் 2020 ஜூலை 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.

10 Jul 2020

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 06 நபர்கள் கடற்படையினரால் கைது

செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் தலைமன்னார், பழைய இறங்குதுறை கடல்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 06 நபர்கள் 2020 ஜூலை 09 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

10 Jul 2020

கேரள கஞ்சாவுடன் ஒரு நபரை (01) கைது செய்ய கடற்படை ஆதரவு

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இணைந்து 2020 ஜூலை 09 ஆம் திகதி நிலாவேலி, நொரச்சோலை பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கைது செய்யப்பட்டார்.

10 Jul 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த மேலும் ஒரு கடற்படை வீரர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 895 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒரு கடற்படை வீரர் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் அவரின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர் 2020 ஜூலை 09 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.

10 Jul 2020