கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியால் நடத்தப்பட்ட முதலாவது தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த கடற்படை அதிகாரிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று (2022 செப்டெம்பர் 23) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். குறித்த பாடநெறியின் சம்பிரதாயமான பட்டமளிப்பு நிகழ்வு கடந்த 2022 செப்டம்பர் 14 ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.