மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 பிப்ரவரி 27 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Sukanya’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து, இன்று (2023 மார்ச் 01) இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவுடன் நடைபெற்ற கூட்டு கடற்படை பயிற்சிக்குப் பிறகு தீவை விட்டுச் செல்கிறது. மேலும் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலுக்கு வழக்கமான பிரியாவிடை வழங்கப்பட்டது.