வட மத்திய கடற்படை கட்டளைக்கு 2023 மே மாதம் 11 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா குறித்த கட்டளையின் செயற்பாட்டுத் தயார்நிலை, பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் நலன்புரி வசதிகள் குறித்து கவனம் செலுத்தியதுடன் கடற்படையின் எதிர்கால நோக்கங்கள், செயல்பாட்டு தயார்நிலை மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களின் மேலாண்மை குறித்து வட மத்திய கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு கூறினார்.