நிகழ்வு-செய்தி
ஆழ்கடலில் விபத்துக்குள்ளான சீன மீன்பிடி கப்பலில் இருந்த மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட கடற்படையினருக்கு பாராட்டுக் கடிதங்கள் வழங்கப்பட்டன
இலங்கைக்கு தெற்கு பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேடுதல் மற்றும் மீட்புப் வலயத்துக்கு சொந்தமான ஆழ்கடலில் 2023 மே 16 ஆம் திகதி கவிழ்ந்த 'LU PENG YUAN YU 028' என்ற சீன மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவர்களை மீட்பதற்காக மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருந்தபோதிலும் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு சுழியோடி நடவடிக்கை சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. மேலும் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2023 ஜூன் 12) கடற்படைத் தலைமையகத்தில் பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.
13 Jun 2023
கல்வியில் சிறந்து விளங்கிய கடற்படை அதிகாரிகளுக்கு பிரித்தானிய கடற்படை நிறுவனத்திடமிருந்து விருதுகள் வழங்கப்பட்டன
இலங்கை கடற்படையின் கல்விப் பாடநெறிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய இரண்டு அதிகாரிகளுக்கு பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் (The Nautical Institute) இலங்கைக் கிளையினால் சான்றிதழ்கள் மற்றும் பலகைகள் வழங்கி வைப்பு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் மற்றும் பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தற்போதைய தலைவர் கொமடோர் ரவீந்திர திசேராவின் தலைமையில் 2023 ஜூன் 10 ஆம் திகதி கொழும்பு இலங்கை தொழில்சார் நிபுணத்துவ சங்கங்களின் நிறுவன அலுவலக வளாகத்தில் (Organization of Professional Associations of Sri Lanka) இடம்பெற்றது.
12 Jun 2023


