நிகழ்வு-செய்தி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவைக்காக கடற்படையின் பங்களிப்புடன் கட்டி முடிக்கப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் வசதிகள் திறக்கப்பட்டது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துக் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு விரிவாக்கத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் பின்னர், அங்கு பயணிகள் முனையம் மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கான வசதிகள் திறந்து வைப்பு இன்று (2023 ஜூன் 16) துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் கௌரவ. நிமல் சிறிபால டி சில்வா மற்றும் கடற்றொழில் அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்த அவர்களின் தலைமையில் மற்றும் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

16 Jun 2023