நிகழ்வு-செய்தி

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கடற்படை ஆதரவு

யாழ்ப்பாணத்திலிருந்து செல்ல கதிர்காமம் ஆலயத்திற்கு வருடாந்த யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை கடற்படையினர் 2023 ஜூன் 10 ஆம் திகதி முதல் நடவடிக்கைகள் தொடங்கினர். அதன்படி, குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓய வரையிலான பகுதியில் செல்லும் யாத்திரிகர்களின் தேவைகள் குறித்து கடற்படையினர் உதவி வழங்கினர். இதற்கிடையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பக்தர்களின் வசதிக்காக கடற்படையால் வழங்கப்படும் சேவைகளை பார்வையிட்டதுடன், ஜூன் 15 ஆம் திகதி கதிர்காமம் செல்லும் பாத யாத்திரையில் இணைந்தார்.

19 Jun 2023

கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் புதிய தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாபா (ஓய்வு) இன்று (2023 ஜூன் 19) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

19 Jun 2023

வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட பதவியேற்பு

ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக 2023 ஜூன் 19 ஆம் திகதி கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

19 Jun 2023

இந்திய கடற்படையின் ‘INS Vagir’ நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vagir’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூன் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

19 Jun 2023