2023 ஜூன் 10ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெற்ற கதிர்காமம் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்களுக்காக இலங்கை கடற்படை சமூக நலத்திட்டத்தின் கீழ் யால லிங் துண பிரதேசத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டதுடன் பக்தர்களின் குடி நீர் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.