வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள பிள்ளைகளின் தலைமைத்துவ திறமையை வளர்க்கும் வகையில் இலங்கை கடற்படையினர் நடத்தும் தலைமைத்துவ பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரின் முதற்கட்டமாக கொழும்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 16 பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றி ஐம்பத்தெட்டு (158) பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று இன்று (2023 ஜூலை 21) கடற்படை தலைமையகம், கொழும்பு துறைமுகம் மற்றும் வெலிசர கடற்படை வளாகத்தில் நடைபெற்றது.