நிகழ்வு-செய்தி

அமெரிக்காவில் நடைபெறும் 25வது கடல்சார் சக்தி மாநாட்டில் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்ப்பு

2023 செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை போர் கல்லூரியில் (U.S. Naval War College) நடைபெற்ற 25 வது சர்வதேச கடல் சக்தி கருத்தரங்கில் (25th International Seapower Symposium - ISS) இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பங்கேற்றார். அங்கு, அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளின் துணைத் தளபதி, அட்மிரல் Lisa M. Franchetti, அமெரிக்காவின் கடலோர காவல்படையின் தளபதி, அட்மிரல் Linda L. Fagan, அமெரிக்காவின் பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் Samuel J. Paparo மற்றும் அமெரிக்க கடற்படைத் மத்திய கட்டளையின் தளபதி வைஸ் அட்மிரல் Brad Cooper உட்பட பிராந்திய மற்றும் பிராந்தியம் அல்லாத மாநிலங்களின் கடற்படைத் தலைவர்கள் மற்றும் கடலோரக் காவல் படைத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்று, கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

26 Sep 2023