இலங்கை கடற்படை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் Geopolitical Cartographer (GC) நிருவனம் பதினொன்றாவது (11வது) முறையாக ஏற்பாடு செய்கின்ற காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு இலங்கை ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்புடன் இன்று (அக்டோபர் 12, 2023) காலி ஜெட்விங் லைட்ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமானதுடன் Emerging New Order in the Indian Ocean என்ற தொனிப்பொருளின் கீழ், இரண்டு நாட்களாக (2023 அக்டோபர் 12-13) நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் 42 நாடுகள் மற்றும் 11 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல கடல்சார் பாதுகாப்பு அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.