இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சமய மற்றும் கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து கடற்படையினர் பரந்த அளவிலான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, கடற்படையினரின் ஒன்றுகூடல் இன்று (20 டிசம்பர் 2023) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் Wave ‘N’ Lake கடற்படை மண்டபத்தில் வண்ணமயமான முறையில் இடம்பெற்றது.