கடற்படையின் இரத்த தான திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி யொன்று 2024 ஏப்ரல் 06 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் ஏற்பாட்டில் திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த தான நிகழ்ச்சி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் திருகோணமலை கடற்படைத் தளத்தின் கடற்படை வீரர்களின் பங்குபற்றுதலின் கீழ் நடைபெற்றது. திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் கோரிக்கைக்கு இணங்க, இரத்தக் களஞ்சியத்தை நிரப்புவதே இந்த மாபெரும் முயற்சியின் பிரதான நோக்கமானது.

திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் உள்ள அனைத்து கப்பல்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து பெருமளவிலான கடற்படை வீரர்கள் இந்த உன்னத பணிக்காக இரத்த தானம் செய்ய முன்வந்தனர். கிழக்கு கட்டளை கடற்படை வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்கள் மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி ஊழியர்களின் உதவியுடன் நிகழ்வின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.