தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க பதவியேற்பு

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க இன்று (2024 ஏப்ரல் 08) தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

கடற்படை மரபுப்படி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்கவை வரவேற்ற பின்னர், குறித்த கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் மகேஷ் டி சில்வா, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.

மேலும், தென்கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் தனது வாழ்த்துக்களை தெரிவித்த பின் ரியர் அட்மிரல் மகேஷ் டி சில்வா, கடற்படையின் மரபுப்படி தென்கிழக்கு கடற்படை கட்டளையிலிருந்து பிரியாவிடை பெற்றுள்ளார்.