கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் 2024 ஏப்ரல் 23 ஆம் திகதி நாகதீப புராண ரஜமஹா விகாரைக்கு மரியாதை செலுத்தினார்.

அதன்படி, இந்த விஜயத்தின் போது, கடற்படைத் தளபதி அவர்கள் நாகதீப புராண ரஜமஹா விகாரையின் பிரதமகுருவும் வடமாகாண பிரதம சங்கநாயக்கருமான அதி வணக்கத்திற்குரிய நவதகலை பதுமகித்தி திஸ்ஸ தேரரை தரிசித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். இதேவேளை, அதி வணக்கத்திற்குரிய நவடகல பதுமகித்தி திஸ்ஸ தேரரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, போதிசத்வ மைத்திரியின் சிலையொன்றும் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், நாகதீப தீவில் கடற்படையினரின் மனிதவளத்தைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டு வரும் மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை கடற்படைத் தளபதி பார்வையிட்டார்.

மேலும், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட உட்பட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.