நிகழ்வு-செய்தி

விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் தகுதிப் பாடநெறியை நிறைவு செய்த 32 கடற்படை வீரர்களுக்கு சின்னங்கள் வழங்கப்பட்டது

கடற்படை விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் இருபத்தி எட்டாவது (28) தகுதிப் பாடநெறியை நிறைவு செய்த நான்கு (04) அதிகாரிகள் மற்றும் இருபத்தி எட்டு (28) மாலுமிகளுக்கு சின்னங்கள் வழங்கும் நிகழ்வு புத்தளம் கங்கேவாடிய விரைவு நடவடிக்கை படகுகள் படைத் தலைமையகத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் 2024 செப்டெம்பர் 14 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் கடற்படையின் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் தலைமையில் பெருமையுடன் நடைபெற்றது.

15 Sep 2024