உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தடைந்த இத்தாலி கடற்படைக்கு சொந்தமான ‘PPA MONTECUCCOLI’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாகுவுடன் இணைந்து நடத்திய கடற்படைப் பயிற்சியின் பின்னர், இன்று (2024 அக்டோபர் 13) இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளது. புறப்பட்ட கப்பலுக்கு கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் பிரியாவிடை வழங்கினர்.