நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி கெளரவ பிரதமர் அவர்களின் முதல் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக விஜயம் செய்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் (2024 ஒக்டோபர் 24) இன்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவப் பிரதமர் திருமதி. கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக பிரதமரின் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.

24 Oct 2024

தொண்டர் கடற்படைத் தலைமையக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கடற்படை அருங்காட்சியகம் கடற்படைத் தளபதி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது

வெலிசறை, இலங்கை தொண்டர் கடற்படைத் தலைமையக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படை அருங்காட்சியகம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில், தொண்டர் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண மற்றும் தாய்நாட்டிற்காக வீரமரணம் அடைந்த கமாண்டர் (தொண்டர்) செட்ரிக் மார்டின்ஸ்டயின் போர் வீரரின் மனைவி, திருமதி. தில்ருக்ஷி மார்ட்டின்ஸ்டயினின் பங்கேற்புடன் நடைபெற்றது.

24 Oct 2024

இலங்கை தொண்டர் கடற்படையின் 2024 வருடாந்த பயிற்சி முகாமின் பிரிவு ஆய்வுசெய்தல் கடற்படைத் தளபதியின் தலைமையில்

இலங்கை தொண்டர் கடற்படையின் 2024 வருடாந்த பயிற்சி முகாமின் பிரிவு சோதனை செய்தல் மற்றும் மரியாதை அணிவகுப்பு 2024 ஒக்டோபர் 24 ஆம் திகதி வெலிசர இலங்கை தொண்டர் கடற்படைத் தலைமையகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் தொண்டர் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண மற்றும் தொண்டர் கடற்படையின் கட்டளை அதிகாரி கொமடோர் சுசாந்த தர்மசிறியின் அழைப்பின் பேரில், இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கலந்து கொண்டார்.

24 Oct 2024

தேசிய பாதுகாப்புப் பாடநெறியின் அதிகாரிகளுக்காக கடற்படைத் தளபதியினால் இரவு விருந்து வழங்கப்பட்டது

இலங்கை தேசிய பாதுகாப்பு அகாடமியின் தேசிய பாதுகாப்பு பாடநெறியை பயிலும் அதிகாரிகளுக்கு பாரம்பரியமாக கடற்படை தளபதியினால் வழங்கப்படும் இரவு விருந்து, குறித்த நிறுவனத்தின் மூன்றாவது (03) பாடநெறியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு வழங்கும் நிகழ்வு 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் தலைமையில் மேற்கு கடற்படை கட்டளை அதிகாரியின் இல்லத்தில் நடைபெற்றது. உலகின் தேசிய பாதுகாப்பு அகாடமிகளில் நடத்தப்படும் இராணுவ பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக (Military tradition) இலங்கையில் தேசிய பாதுகாப்பு பாடநெறியில் கல்வி கற்கும் அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கு கடற்படை தளபதியினால் இவ்வாரு இரவு விருந்து வழங்கப்பட்டன. அதன்படி, இந்நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தேசிய பாதுகாப்பு அகாடமியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா மற்றும் அவருடைய மனைவி உட்பட பாடநெறியைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முப்படைகள் மற்றும் காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள், நிறுவனத்தின் கல்விப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் மனைவிகளை கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவாவினால் மேற்கு கடற்படை கட்டளை அதிகாரி இல்லத்திற்கு மிகவும் அன்பாக வரவேற்கப்பட்ட பின்னர், பாரம்பரியமாக வழங்கப்படும் இரவு விருந்து வழங்கப்பட்டது.

24 Oct 2024

வடக்கு கடற்படை கட்டளையின் நலன்புரி வசதிகள் விரிவாக்கப்பட்டது

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான உத்தர நிறுவனத்தின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், 2024 ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி புனரமைக்கப்பட்ட பூப்பந்து விளையாட்டரங்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட பிரதான சமையலறை வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

24 Oct 2024