நிகழ்வு-செய்தி
இந்திய கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் பரமேஷ் சிவமணி (DG Paramesh Sivamani, PTM, TM) இன்று (2024 நவம்பர் 11) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
11 Nov 2024
அகில இலங்கை வரைபடங்கள் மற்றும் நேரடி காணொளிப் போட்டித்தொடரில் பரிசுகளுக்காக கொழும்பு திட்டம் மற்றும் டயலொக் ஆசியாடா நிருவனம் அனுசரணை வழங்குகிறது
போதைப்பொருள் இல்லாத ஒளிமயமான எதிர்காலத்திற்காக குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறை வலுவூட்டல் என்ற உன்னதமான கருப்பொருளை மனதில் கொண்டு, நச்சு போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் பயன்பாட்டைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட பணிக்குழுவின் தலைமையில் பாடசாலைக் குழந்தைகள் மற்றும் இளைஞர் சமுதாயத்தினருக்காக வரைபடங்கள் மற்றும் நேரடி காணொளிப் போட்டித்தொடரொன்று 2024 நவம்பர் மாத்த்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறித்த போட்டித்தொடரில் வெற்றி பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளுக்கு அனுசரணை வழங்கும் கொழும்பு திட்டம் மற்றும் டயலொக் ஆசியாடா நிருவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் 2024 நவம்பர் 11 ஆம் திகதி நச்சு போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் பயன்பாட்டைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட பணிக்குழுவின் தலைவரான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்து அடையாள ரீதியாக பரிசுகளை கையளித்தனர்.
11 Nov 2024
ஊனமுற்றுள்ள ஓய்வு பெற்ற கடற்படை வீரரொருவருக்கு சக்கர நாற்காலியொன்று வழங்கப்பட்டது
யுத்தத்தின் போது ஊனமுற்றுள்ள ஓய்வு பெற்ற கடற்படை வீரர் ஐ.டி.என் திலக்குமாரவுக்கு சக்கர நாற்காலியொன்று வழங்கும் நிகழ்வு 2024 நவம்பர் 10 ஆம் திகதி கண்டி வத்தேகமவில் உள்ள குறித்த மாலுமியின் இல்லத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் மற்றும் சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவாவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
11 Nov 2024
கடற்படை மூலம் மீனவர்களுக்காக போதைப்பொருள் தடுப்பு மற்றும் அடிப்படை உயிர் உதவி பயிற்சி நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது
இலங்கை கடற்படை, சுகாதார அமைச்சகம் மற்றும் மீன்பிடி அமைச்சகத்துடன் இணைந்து மீனவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு மற்றும் அடிப்படை உயிர் உதவி (Basic Life Support - BLS) பயிற்சி நிகழ்ச்சிகள் 2024 ஜூலை 14 ஆம் திகதி முதல் 2024 நவம்பர் 8 ஆம் திகதி வரை திருகோணமலை கோட்பே மீன்பிடி துறைமுகத்தில் வெற்றிகரமாக நடத்தியது.
11 Nov 2024


