இத்தாலிய கடற்படைக்கு சொந்தமான ‘ANTONIO MARCEGLIA’ என்றபோர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இத்தாலிய கடற்படைக்கு சொந்தமான ‘ANTONIO MARCEGLIA’ என்ற போர்க்கப்பல் இன்று (2025 பெப்ரவரி 05) அதிகாலை வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Frigate ரக ‘ANTONIO MARCEGLIA’ போர்க்கப்பல் 144 மீட்டர் நீளமும் மொத்தம் 199 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் ALBERTO BARTOLOMEO கடமையாற்றுகின்றார்.

மேலும், இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் கப்பலின் உறுப்பினர்கள் , கொழும்பு மற்றும் காலி பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளனர்

மேலும், வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு, ‘ANTONIO MARCEGLIA’ 2025 பெப்ரவரி 07, அன்று இலங்கையை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்து இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.