கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அவர்களை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக 2025 பெப்ரவரி 11 அன்று நீதியமைச்சில் சந்தித்தார்.

இதன்படி, இராணுவ மரபுகளுக்கு அமைவாக இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், 26ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதிக்கு கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், இதனை நினைவு கூறும் வகையில் கடற்படைத் தளபதி கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு நினைவுப் பரிசினை வழங்கி வைத்தார்.