இந்தியாவின் புதுதில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையிள் கடற்படை தளபதியை சந்தித்தார்
இந்தியாவின் புதுதில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் மற்றும் இலங்கையிலும் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் கர்னல் Avihay Zafrany இன்று (2025 பெப்ரவரி 17) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகோடாவைச் சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகரால் 26 வது கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து நட்பு ரீதியிலான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.