இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணிபுரியும் திருமதி ஜூலி (Julie Chung) இன்று (2025 பெப்ரவரி 19) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவைச் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், 26ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் காஞ்சனா பனாகொடவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் கடற்படை ஆலோசகர் லெப்டினன்ட் கமாண்டர் ஜெசிகா வி.டி மோன்ட் (Jessica V. De Mont) அவர்களும் கலந்துகொண்டதுடன், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசில்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.