கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் பண்டுவஸ்நுவர ஹல்மில்லவெவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், குருநாகல் மாவட்டத்தில் பண்டுவஸ்நுவர மேற்கு பிராந்திய மத்திய பேரம்பொல ஹல்மில்லவெவ கிராமத்தில் நிறுவப்பட்ட 1081வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு சுமார் 10000 லீற்றர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதுடன், இதன் மூலம் பண்டுவஸ்நுவர, ஹல்மில்லவெவ கிராமத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை இலகுவாக பூர்த்தி செய்ய முடியும்.