ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் தீவைவிட்டு புறப்பட்டது
2025 மார்ச் 22 ஆம் திகதி விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின் இன்று 2025 மார்ச் 25 தீவில் இருந்து புறப்பட்டதுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர்.
இந்த விஜயத்தின் போது, கப்பலின் கட்டளைத் தளபதி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், ‘MURASAME’ கப்பலானது தீவில் தங்கியிருந்த காலத்தில், அதன் பணிக்குழுவினர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதில் பங்குகொண்டனர்.