விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை இன்று (2025 ஜூலை 02) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

அதன்படி, கடற்படை தலைமையகத்திற்குள் பிரவேசித்த விமானப்படைத் தளபதியை, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா வரவேற்றார், மேலும் கடற்படையினரால் அவருக்கு சம்பிரதாய ரீதியான மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர், கடற்படைத் தளபதி கடற்படைத் தலைமை அதிகாரியையும், நிர்வாகக் குழுவையும் விமானப்படைத் தளபதிக்கு அறிமுகப்படுத்தினார்.

இராணுவ மரபுகளுக்கு இணங்க நடைப்பெற்ற இச் சந்திப்பில், விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளிடையே இருதரப்பு பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள பரிமாறிக் கொள்ளப்பட்டது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையின் முக்கிய பங்களிப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன். சகோதரப் படைகளுக்கு இடையிலான பிணைப்பையும், சேவைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்காக நடைபெற்ற உத்தியோகப்பூர்வ சந்திப்பை அடையாளப்படுத்தும் முகமாக இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.