சீரற்ற வானிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க கடற்படையால் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டத்தின் கீழ், மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்குதல், பொது இடங்கள் மற்றும் குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்தல், சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை பழுதுபார்த்தல், பாலங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மதகுகளை பழுதுபார்ப்பதற்கு சுழியோடி உதவி வழங்குதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்தல் ஆகியவற்றில் கடற்படை தொடர்ந்து பங்களிக்கிறது.