உலகளாவிய மற்றும் பிராந்திய ஒத்துழைப்பையும், பாதுகாப்பான கடல் மண்டலத்திற்கான கூட்டுப் பொறுப்பையும் வெளிப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு விழாவிற்கு வந்த வெளிநாட்டு போர்க்கப்பல்களினால், நாட்டில் ஏற்பட்ட தேசிய பேரிடரின் போது மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் உதவியதற்காக, 2025 நவம்பர் 30 ஆம் திகதி காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள மேற்குக் கடலில் இலங்கை கடற்படை நடத்திய 2025 சர்வதேச கப்பல் கண்காணிப்பின் போது, இலங்கை கடற்படை பிரணாமம் தெரிவித்தது. இந்த நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாகு போர்க்கப்பலில் இருந்து, போர்க்கப்பலால் வழங்கப்பட்ட பாரம்பரிய கடற்படை மரியாதையைப் பெற்றார்.