பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (ஜனவரி 13) அக்குரேகொடையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தலைமையகத்தின் கடற்படை செயல்பாட்டு அறைக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டார். இதன் போது, “Ratama Ekata” திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், சமீபத்திய தேசிய அவசரகால இயற்கை அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டு இருந்த போதிலும், அந்தத் திட்டத்தை தொடர்ந்து மற்றும் திறம்பட செயல்படுத்தியமைக்காக இலங்கை கடற்படையைப் பாராட்டினார்.