நிகழ்வு-செய்தி

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் ஹம்பாண்தோட்டை துறைமுகத்துக்கு வருகை

இந்தோனேசிய கடற்படையின் " KRI Bung Tomo "எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (2021 பிப்ரவரி 05) ஹம்பாண்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

05 Feb 2021

73 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக காலி முகத்திடத்தில் கடற்படை கண்காட்சிகள்

73 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை கண்காட்சியொன்று 2021 பிப்ரவரி 04 அன்று காலி முகத்திடத்தில் தொடங்கியது.

05 Feb 2021

25 துப்பாக்கி சூடு மரியாதையுடன் இலங்கை கடற்படை 73 வது சுதந்திர தினத்தன்று தேசத்திற்கு அஞ்சலி செலுத்தியது

73 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு மரியாதையுடன் தேசத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (2021 பிப்ரவரி 04) இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவில் மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் ஆயுத அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் கசுன் பிரகீத்வினால் மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வுக்காக கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சமிந்த கருனாசேன மற்றும் நிர்வாக அதிகாரி பன்டார வாஹல ஆகியோர் கலந்து கொண்டனர்.

04 Feb 2021

73 வது தேசிய சுதந்திர தினத்தில் கடற்படை பெருமையுடன் பங்கேற்கிறது

73 ஆவது சுதந்திர தின விழா இன்று (2021 பெப்ரவரி 04) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தளபதியுமான அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றதுடன் இவ் நிகழ்வில் கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.

04 Feb 2021

தென்கிழக்கு கடற்படை கட்டளை மூலம் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கல்

தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த கமகேவின் தலைமையில் அம்பாரை பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

01 Feb 2021

கடற்படை வீரர்களுக்கு 'அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்' தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு வெலிசர கடற்படை வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அதி மேதகு ஜனாதிபதி கோட்டாய ராஜப்கஷவின் வேண்டுகோளின் பேரில், இந்திய அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கொவிட்ஷீல்ட் (AstraZeneca Covidshield) தடுப்பூசிகளின் கடற்படைக்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் சுகாதார அமைச்சகத்தில் இருந்து இன்று (2021 ஜனவரி 29) வெலிசர கடற்படை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட பின் கொவிட் – 19 வைரஸ் தடுப்புக்காக முன்னிலையிலிருந்து செயலாற்றும் சில கடற்படை வீரர்களுக்கு முதற் கட்டமாக இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

29 Jan 2021

மறைந்த ரியர் அட்மிரல் மொஹான் ஜெயமஹவின் நினைவு சிலை தம்புல்லையில் திறக்கப்பட்டது

தாய்நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான போர்வீரரான ரியர் அட்மிரல் மொஹான் ஜெயமஹவை நினைவுகூருவதுக்காக தம்புல்லை, தபுலுகம மப/கலே/வீர மொஹான் ஜெயமஹ மகா வித்தியாலயத்தில் கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட நினைவு சிலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இன்று (2021 ஜனவரி 29) திறந்து வைக்கப்பட்டன.

29 Jan 2021

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் இன்று (2021 ஜனவரி 27) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

27 Jan 2021

கடற்படை சிறப்பு படகுகள் படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் நிச்சங்க விக்ரமசிங்க கடமைகளை ஏற்றுக்கொண்டார்

இலங்கை கடற்படை சிறப்பு படகுகள் படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் நிச்சங்க விக்ரமசிங்க 2021 ஜனவரி 15 அன்று கடற்படை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

19 Jan 2021

ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தலைவருமான ஜனாதிபதி அதிமேதகு கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2021 ஜனவரி 15 ஆம் திகதி முதல் அமல்படுத்தினார்.

16 Jan 2021