நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் உபுல் த சில்வா மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்
மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் த சில்வா இன்று (2021 மே 18) மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
18 May 2021
COVID-19 சிகிச்சைகளுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை கடற்படைத் தளபதியின் மேற்பார்வைக்கு
கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான உள்கட்டமைப்புகள் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் கடற்படையினரின் பங்களிப்பால் கம்பஹ மாவட்டத்தில் நிறுவப்பட்ட கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தில் மற்றும் வதுபிடிவல, கம்பஹ, மினுவங்கொடை ஆகிய வைத்தியசாலைகளில் வசதி விரிவாக்கத்தின் முன்னேற்றத்தை இன்று (2021 மே 15) கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பார்வையிட்டார்.
15 May 2021
கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் மேற்கொள்ளப்படும் கொவிட் 19 தடுப்பூசி திட்டத்துக்கு கடற்படையின் ஆதரவு
கொவிட் 19 பரவுவதை கட்டுப்படுத்துவதுக்காக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் கோவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு சேவைகளை வழங்கும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு இன்று (2021 மே 15) கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் சுகாதார மருத்துவ அதிகாரியுடன் இணைந்து கடற்படையினரால் “சினோபார்ம்” (Sinopharm) தடுப்பூசியை வழங்கப்பட்டது.
15 May 2021
வெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் புதிய குழந்தைகள் வார்டு திறக்கப்பட்டது
கடற்படை உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் வெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் புதிய வசதியுடன் கட்டப்பட்ட குழந்தைகள் வார்டு இன்று (2021 மே 14) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வருகையுடன் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டது.
14 May 2021
கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் ஹம்பாந்தோட்டையில் இரத்த தான திட்டமொன்று இடம்பெற்றது
கடற்படை மற்றும் தேசிய இரத்தமாற்ற சேவை ஏற்பாடு செய்த இரத்த தான திட்டமொன்று ஹம்பாந்தோட்டை இலங்கை கடற்படை கப்பல் காவந்திஸ்ஸ நிறுவனத்தில் இன்று (2021 மே 14) நடைபெற்றது.
14 May 2021
முல்லேரியாவ கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலைக்கு கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நன்கொடையாக படுக்கைகள் வழங்கப்பட்டது
இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக முல்லேரியாவ கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலையின் சிறப்பு மகப்பேறு பிரிவுக்கு HDU/ICU (High Dependency Unit / Intensive Care Unit) வகையில் 03 படுக்கைகள் வழங்கும் நிகழ்வு 2021 மே 12 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கலங்கரை விளக்கம் உணவகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
13 May 2021
ரியர் அட்மிரல் பண்டார ஜெயதிலக கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
33 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் பண்டார ஜயதிலக இன்று (2021 மே12) ஓய்வு பெற்றார்.
12 May 2021
கொவிட் 19 தடுப்பூசி திட்டத்திற்கு கடற்படையின் ஆதரவு
கொவிட் 19 அபாயத்தை தடுப்பதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் கோவிட் 19 அச்சுறுத்தலை எதிர்கொண்டு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு இன்று (2021 மே 11) “சினோபார்ம்” (Sinopharm) தடுப்பூசியை கம்பஹ மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மருத்துவ அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கடற்படை வழங்கியது.
11 May 2021
கொவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு சுகாதாரத் துறையில் வசதிகளை மேம்படுத்த கடற்படையின் பங்களிப்பு
தற்போதுள்ள கோவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு சுகாதாரத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்க திட்டங்களுக்கு ஆதரவாக மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கோவிட் 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த இலங்கை கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
10 May 2021
கொழும்பு துறைமுக நுழைவாயிலில் விழுந்திருந்த பணப்பையை திருப்பி உரிமையாளரிடம் ஒப்படைத்த கடற்படை வீரர் கடற்படைத் தளபதியால் பாராட்டப்பட்டார்.
2021 ஏப்ரல் 27 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலுக்கு முன்னால் சாலையில் விழுந்திருந்த ஒரு பணப்பையும் அதில் உள்ள பணத்தையும் உரிமையாளரிடம் ஒப்படைத்த கடற்படை வீரர் ஏ.ஜி.எச்.எஸ் உதய குமார, எக்ஸ்.எஸ் 100126, வின் இந்த நற்செயலைப் பாராட்டி அவருக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2021 மே 10) கடற்படை தலைமையகத்தில் பாராட்டு கடிதத்தை வழங்கினார்.
10 May 2021


