நிகழ்வு-செய்தி

கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்று பூஸ்ஸ கடற்படை தளத்தில் நிறுவப்பட்டது

கொவிட் 19 நோய்த்தொற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவாக, 162 படுக்கைகள் கொண்ட கோவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்றை 2021 மே 04 ஆம் திகதி காலி, பூஸ்ஸ கடற்படை தளத்தில் நிறுவப்பட்டது.

05 May 2021

கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்று கடற்படையால் கம்பஹ பகுதியில் நிறுவப்பட்டது

கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான உள்கட்டமைப்புகள் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை வலுப்படுத்தி, கம்பஹ பகுதியில் ஒரு இடைநிலை சிகிச்சை மையமொன்றை நிறுவ 2021 மே 02 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

04 May 2021

ரியர் அட்மிரல் சஜித் கமகே கடற்படை வெளியீட்டு கட்டளையின் புதிய கொடி அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

கடற்படை வெளியீட்டு கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சஜித் கமகே 2021 ஏப்ரல் 30 ஆம் திகதி கடற்படை வெளியீட்டு கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

01 May 2021

ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2021 ஏப்ரல் 30) வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

30 Apr 2021

காலி கலந்துரையாடல் 2021 அதிகாரப்பூர்வ வலைத்தளம் வெளியிடப்பட்டது

2021 காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (2021 ஏப்ரல் 30) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் வெளியிடப்பட்டது.

30 Apr 2021

ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகே தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகே இன்று (2021 ஏப்ரல் 27) தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

27 Apr 2021

செயலிழந்த படகு பாலம் கடற்படையின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் குரிகட்டுவான் படகுத்துறையில் இருந்து நயனதீவுக்கு பொருட்கள் மற்றும் பயணிகளை கொண்டு செல்ல சாலை மேம்பாட்டு ஆணையத்தால் பயன்படுத்தப்பட்ட படகு பாலம் (Ferry) பல மாதங்களாக செயலற்ற நிலையில் இருந்ததுடன் சமீபத்தில் கடற்படையின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது.

27 Apr 2021

கடற்படை வீரர்களின் நலனுக்காக பல்நோக்கு செயல்பாட்டு மண்டபமொன்று கட்டப்படுகின்றது

அனைத்து கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் அதிநவீன பல்நோக்கு செயல்பாட்டு மண்டபமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டுதல் இன்று (2021 ஏப்ரல் 25) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் வெலிசர கடற்படை வளாகத்தில் நடைபெற்றது.

25 Apr 2021

‘Galaxy Cup’ 25 வயதுக்குட்பட்ட சூப்பர் லீக் மகளிர் கைப்பந்து கிண்ணம் – 2021 கடற்படை பெற்றுள்ளது

ශஇலங்கை கைப்பந்து கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Galaxy Cup’ 25 வயதுக்குட்பட்ட சூப்பர் லீக் கைப்பந்து சாம்பியன்ஷிப் - 2021 போட்டித் தொடரில் இன்று (ஏப்ரல் 24, 2021) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கடற்படை பெண்கள் அணி ஹைட்ரமணி விளையாட்டுக் கழக மகளிர் அணியை தோற்கடித்து கிண்ணத்தை வென்றது. மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சிலின் உள்ளரங்க அரங்கத்தில் நடைபெற்ற இந்த பெண்கள் இறுதி போட்டியில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டார்.

24 Apr 2021

ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களின் இறுதி சடங்குகளுக்காக நிதி உதவி

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வப் கடற்படையின் பணியாற்றி ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களின் இறுதி சடங்குகளுக்காக அவர்களின் உறவினர்களுக்கு ரூ .100,000 வழங்க கடற்படை திட்டமிட்டுள்ளது.

24 Apr 2021