நிகழ்வு-செய்தி

சட்டவிரோத போதை மாத்திரைகள் மற்றும் ஹெரொயின் கொண்ட மூன்று நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கிணைந்து 2020 மே 21 ஆம் திகதி திருகோணமலை, உப்புவேலி மற்றும் வெலிஒய ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள இரண்டு சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதை மாத்திரைகள் மற்றும் ஹெரொயின் கொண்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

22 May 2020

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கி இருந்த குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது

காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 மே 21 ஆம் திகதி கடற்படையினரால் அகற்றப்பட்டன.

22 May 2020

சட்டவிரோத போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் வாள் வைத்திருந்த ஒரு நபர் கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கிணைந்து 2020 மே 20 ஆம் திகதி திருகோணமலை ஜமாலியா பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது சட்டவிரோத போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் வாள் வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

21 May 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 10 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 10 நபர்கள் இன்று (2020 மே 21) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

21 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 16 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 16 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 20 ஆம் திகதி அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

21 May 2020

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் கடலில் சிக்கித் தவிக்கும் மீன்பிடிப் படகுகளுக்கு உதவி வழங்க கடற்படைக் கப்பலொன்று புறப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக, வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள கடல் பகுதி மையமாக் கொண்டு நகர்ந்த ‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட பல மீன்பிடி படகுகளுக்கு தேவையான ஆதரவையும் எரிபொருளையும் வழங்க இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலொன்று குறித்த பகுதிக்கு அனுப்ப கடற்படை இன்று (2020 மே 21) நடவடிக்கை எடுத்துள்ளது.

21 May 2020

கேரள கஞ்சா கொண்ட ஒரு நபர் கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவு இணைந்து 2020 மே 19 ஆம் திகதி நிலாவேலி கோபாலபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

20 May 2020

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களுடன் மூன்று நபர்கள் (03) கடற்படையால் கைது

குச்சவேலி பல்லவகுளம் பகுதியில் 2020 மே 19 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற வெடிபொருட்களுடன் முன்று சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

20 May 2020

தேசிய போர்வீரர்களின் நினைவு விழா அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றது

2020 ஆம் ஆண்டு தேசிய போர்வீரர்களின் நினைவு விழா, முப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் 2020 மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.

20 May 2020

வெற்றிகரமான தனிமைப்படுத்தல் செயல்முறைக்குப் பிறகு கடற்படை வீரர்களின் 45 குடும்ப உறுப்பினர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

கடற்படை வீரர்களின் 11 குடும்பங்களைச் சேர்ந்த 45 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை முடித்து 2020 மே 19 ஆம் திகதி குறித்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து வெளியேறினர்.

20 May 2020