நிகழ்வு-செய்தி
தொற்றாத நோய்களைத் தடுப்பதற்காக கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஒரு சிறப்பு சுகாதார கல்வி திட்டம் கடற்படைத் தலைமையகத்தில்

கடற்படை வீரர்கள் தொற்றாத நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக கலாநிதி ரியர் அட்மிரல் கோதாபய ரணசிங்க அவர்களால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விசேட விரிவுரை 2024 ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.
23 Oct 2024
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வு பாடநெறியின் அதிகாரிகள் குழுவினர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கைக்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்ட அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுப் பாடநெறியைச் (Defence and strategic studies course - Australian) சேர்ந்த மாணவ அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழிய உறுப்பினர்கள், Colonel Lara Terese Troy தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2024 ஒக்டோபர் 22) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்ததுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கடற்படைத் தலைமையகத்திற்கு வந்த அதிகாரிகளை வரவேற்றார்.
22 Oct 2024
கடற்படையினால் மினுவங்கொட ஆதார வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு பிரிவில் மருத்துவ தர மறுசீரமைப்பு இயந்திரம் நிறுவப்பட்டது

இலங்கை கடற்படையின் சமூக பணி திட்டத்தின் கீழ், 2024 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி மினுவங்கொட ஆதார வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு பிரிவில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ தர மறுசீரமைப்பு இயந்திரம் ஒன்று (01) கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி. இந்திராணி மல்வென்ன மற்றும் செயற்திட்ட (கடற்படை சமூக பணி) முகாமையாளரினால் மக்களின் உரிமைக்காக வழங்கப்பட்டது.
21 Oct 2024
இந்திய கடற்படையின் “INS Kalpeni (T-75)” என்ற விரைவுத் தாக்குதல் படகு தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் பின் இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான “INS Kalpeni (T-75)” என்ற விரைவுத் தாக்குதல் படகு, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (2024 ஒக்டோபர் 21) இலங்கையை விட்டு வெளியேறியதுடன் இலங்கை கடற்படையினர் குறித்த நீர்மூழ்கி படகுக்கு கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படையின் பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை வழங்கினர்.
21 Oct 2024
இந்திய கடற்படையின் “INS Kalpeni (T-75)” விரைவுத் தாக்குதல் படகு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான “INS Kalpeni (T-75)” என்ற விரைவு தாக்குதல் படகு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஒக்டோபர் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த படகை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
19 Oct 2024
கடற்படை சேவைகள் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண பதவியேற்றார்

இலங்கை தொண்டர் கடற்படைத் தளபதியாக இருந்த, ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண, கடற்படையின் பணிப்பாளர் நாயகமாக இன்று (2024 ஒக்டோபர் 18) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் சேவைகள் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
18 Oct 2024
இரண்டாவது இந்திய-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 கொழும்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் பணிக்குழு மற்றும் இலங்கை கடற்படையின் இணைத்தலைவர் 2024 ஒக்டோபர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு தினங்களில் (02) கொழும்பு கோட்யார்ட் ஹோட்டல் வளாகத்தில் இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 (2nd IORIS Steering Committee Policy Board and Working Groups Meeting -2024), 2024 ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வெற்றிகரமாக முடிவடைந்தது.
18 Oct 2024
இந்திய உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறியின் அதிகாரிகள் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கைக்கான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறியின் (Higher Defence Management Course India) மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்விப் பணியாளர்களைக் கொண்ட Colonel Kedar D Gupte தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2024 அக்டோபர் 15) கடற்படைத் தலைமையகத்திற்கு வருகைதந்தனர். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்த குழுவினரை கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்றார்.
15 Oct 2024
இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 கொழும்பில்

ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்படும் இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 (2nd IORIS Steering Committee Policy Board and Working Groups Meeting -2024) இன்று (2024 அக்டோபர் 15) கொழும்பு கோட்யார்ட் ஹோட்டல் வளாகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் ஆரம்பமானது.
15 Oct 2024
கடற்படைக் களப் பயிற்சி “Marines Field Training Exercise Blue Whale - 2024” வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படையின் மரைன் படையணியால் மூன்றாவது (03) தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட “Marines Field Training Exercise Blue Whale - 2024” கடற்படைக் களப் பயிற்சி 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை வடமேற்கு கடற்கரை மற்றும் அதனுடன் தொடர்புடைய கரையோரப் பகுதியை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன் பயிற்சியின் இறுதி உரை கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் திருகோணமலை இலங்கை கடற்படை கப்பல் விதுர மரைன் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
15 Oct 2024