நிகழ்வு-செய்தி
கடற்படைத் தளபதி பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளரைச் சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சு செயலகத்தில் இன்று (2024 ஒக்டோபர் 02) பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக கடமையாற்றும் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தாவை (ஓய்வு) உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
02 Oct 2024
ஒருங்கிணைந்த கடல்சார் படையணியின் 154 கூட்டு பணிக்குழுவின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

பஹ்ரைனில் நிறுவப்பட்ட உலகின் மிகப்பெரிய கடல்சார் கூட்டணியாகக் கருதப்படும், ஒருங்கிணைந்த கடல்சார் படையணியின் (Combined Maritime Force - CMF) கீழ் செயல்படும் 154 வது கூட்டுப் பணிக்குழுவின் தற்போதைய கட்டளை அதிகாரியான கொமடோர் Haytham Elsayed Khalil உட்பட குழுவினர். இன்று (அக்டோபர் 02, 2024) அதிகாரப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்ததுடன் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 154 ஆவது கூட்டுப் பணிக்குழுவின் கட்டளையை இலங்கை கடற்படை பொறுப்பேற்க உள்ளது.
02 Oct 2024
255 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 271 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 255 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான நிரந்தர கடற்படையின் இருநூற்று பதினொரு (211) பயிற்சி மாலுமிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் அறுபது (60) பயிற்சி மாலுமிகள் உட்பட மொத்தம் இருநூற்று எழுபத்தி ஒரு (271) பயிற்சி மாலுமிகள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2024 செப்டம்பர் 28 ஆம் திகதி பூணாவ இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
29 Sep 2024
சர்வதேச கடற்கரையை சுத்தம் செய்யும் தினத்துடன் இணைந்து கடற்படையினரால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் மற்றும் தேசிய கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி இலங்கை கடற்படையானது 2024 செப்டெம்பர் 28 ஆம் திகதி காலை கடற்படை கட்டளைகளை உள்ளடக்கி கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
29 Sep 2024
இலங்கை அரச கடற்படையின் காலத்தில் திருகோணமலையில் கடமையாற்றிய பிரித்தானிய அரச கடற்படை அதிகாரியின் அஸ்தி திருகோணமலை கடலில் கடற்படை மரியாதையுடன் கலைக்கப்பட்டது

1956/1958 காலப்பகுதியில், உலகின் இரண்டாவது பெரிய கடற்படைத் தளமாகக் கருதப்பட்ட திருகோணமலையில் நிறுவப்பட்ட HMS Highflyer கடற்படைத் தளத்தின் துறைமுக சமிக்ஞை அதிகாரியாக பணியாற்றிய, 1999 இல் காலமான லெப்டினன்ட் Norman Schofield மற்றும் அவரது மனைவி Marian Schofield ஆகியோரின் அஸ்தி, அதிகாரியின் இறுதி விருப்பத்தின்படி, திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் Ostenburg முனைக்கு அருகில் உள்ள கடலில் கடற்படைப் பாரம்பரியம் மற்றும் மரியாதையுடன் கலைக்கும் நிகழ்வு குறித்த அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Darren Woods ஆகியோரின் பங்கேற்புடன் 2024 செப்டெம்பர் 27 ஆம் திகதி காலை நடைபெற்றது.
28 Sep 2024
இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாய பயிற்சியை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படையினர் வெற்றிகரமாக நடத்தினர்

இலங்கை கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளையில் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பிரிவினால் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயம் ஏற்படும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பயிற்சியொன்று 2024 செப்டெம்பர் 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
27 Sep 2024
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளரின் பதவியேற்பு நிகழ்வில் கடற்படை தளபதி பங்கேற்பு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஆயுதப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான திரு. அனுர குமார திஸாநாயக்க அவர்கள் 2024 செப்டம்பர் 23 முதல் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவை (ஓய்வு) நியமித்தார். அவருடைய கடமைகளை பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.
25 Sep 2024
கடற்படையினரால் நவீனமயமாக்கப்பட்ட "நெடுந்தாரகை" பயணிகள் போக்குவரத்துக் கப்பல் இயக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தின், நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் ஜெட்டி இடையிலான பயணிகள் போக்குவரத்து வசதிகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பயன்படுத்தப்பட்ட 'நெடுந்தாரகை' என்ற பயணிகள் போக்குவரத்துக் கப்பல் கடற்படையினரால் நவீனப்படுத்தப்பட்ட பின்னர் 2024 செப்டெம்பர் 19 ஆம் திகதி செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டது.
20 Sep 2024
இலங்கைக்கான பதில் பிரான்ஸ் தூதுவர் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

பிரான்சில் கடல்சார் ஆய்வுகளுக்கான பிராந்திய மையத்தில் புதிய கல்வி இயக்குனர் (French Director of studies of the Regional Center for Maritime Studies) லெப்டினன்ட் கமாண்டர் Carine BUZAUD அறிமுகப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக, இலங்கைக்கான பதில் பிரான்ஸ் தூதுவர் கௌரவ Marie-Noëlle Duris அவர்கள் இன்று (2024 செப்டம்பர் 19) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
19 Sep 2024
வெருகல் ஆறு வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி இந்து ஆலயத்தில் வருடாந்த மகோட்சவ திருவிழாவை நடத்துவதற்கு கடற்படை உதவியது

திருகோணமலை, வெருகல் ஆறு, வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி இந்து ஆலயத்தில் 14 நாள் வருடாந்த மகோட்சவ திருவிழாவை 2024 செப்டெம்பர் 18 ஆம் திகதி நிறைவடைந்ததுடன், வெருகல் ஆறு ஆற்றங்கரையோரம் இடம்பெற்ற யாக பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பெருந்தொகையான பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடற்படையினர் உயிர் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டனர்.
19 Sep 2024