நிகழ்வு-செய்தி
78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்படை இரத்த தான திட்டங்களை நடத்தியது
78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடற்படை பல இரத்த தான திட்டங்களை ஏற்பாடு செய்தது. இதன்படி, திருகோணமலை புல்மோட்டை மருத்துவமனை மற்றும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனை ஆகியவற்றில் இரத்த தான நிகழ்வுகள் 2026 பிப்ரவரி 02 மற்றும் 05 ஆகிய திகதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.
09 Feb 2026
மீன்பிடி சமூகத்தினருக்கான அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி திட்டத்தை கடற்படை நடத்தியது
இலங்கை கடற்படையால் மீனவ சமூகத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காப்பு (Basic Life Support - BLS) பயிற்சி திட்டம் 2026 பிப்ரவரி 02, அன்று திருகோணமலையில் உள்ள கோட்பே மீன்வளத் துறைமுகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
08 Feb 2026
இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘INS GHARIAL’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து தீவிலிருந்து புறப்பட்டது
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக 2026 பிப்ரவரி 04 அன்று இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS GHARIAL', தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2026 பிப்ரவரி 06 அன்று இலங்கையிலிருந்து புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் அந்தக் கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வமான பிரியாவிடையை வழங்கியது.
08 Feb 2026
78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் கடற்கரைகள் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்வதில் கடற்படையின் பங்களிப்பு
78 வது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக வட மாகாணத்தில் கடற்கரை மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்யும் திட்டங்களுக்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பானது 2026 பிப்ரவரி 04 அன்று மேற்கொள்ளப்பட்டது.
07 Feb 2026
கச்சத்தீவு வருடாந்த திருவிழாவைக் கொண்டாடுவதற்காக கடற்படையானது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றது
யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை 2026 பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், மேலும் குறித்த நிகழ்விற்கு தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு இலங்கை கடற்படை தொழில்நுட்பம், வளம் மற்றும் மனிதவள ஆதரவை வழங்கி வருகிறது.
06 Feb 2026
இலங்கைக்கான இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இந்தியாவின் புது தில்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்துடன் இணைக்கப்பட்ட, இலங்கைக்கான இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் கெப்டன் Armando Paolo SIMI, 2026 பிப்ரவரி 05, அன்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.
06 Feb 2026
இந்திய கடற்படையின் போர்கப்பலான 'INS GHARIAL' உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது
இந்திய கடற்படையின் போர்கப்பலான 'INS GHARIAL' 2026 பெப்ரவரி 04 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
06 Feb 2026
இலங்கையின் பெருமைமிக்க 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்படை 25 துப்பாக்கி சூட்டு வணக்கங்களை செலுத்தியது
இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்ட 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில், இலங்கை கடற்படை இன்று (2026 பெப்ரவரி 04,) மதியம் 1200 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான சயுரவிலிருந்து தேசத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் 25 துப்பாக்கிச் சூட்டு மரியாதை செலுத்தப்பட்டது. சயுரவின் கட்டளை அதிகாரி கெப்டன் கொன்ட் அன்னதுகொடவின் தலைமையில் இந்த மரியாதை செலுத்தப்பட்டது.
04 Feb 2026
இலங்கை கடற்படை 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களில் பெருமையுடன் பங்கேற்கிறது
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான கௌரவ அனுர குமார திசாநாயக அவர்களின் தலைமையில், “இலங்கையை கட்டியெழுப்புதல்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று (2026 பெப்ரவரி 04,) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 78வது தேசிய சுதந்திர தின விழாவில் இலங்கை கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.
04 Feb 2026
கடற்படையால் நிறுவப்பட்ட 1148 வது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் பொலன்னறுவையில் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அரலகங்வில கிராமத்தில் நிறுவப்பட்ட (01) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 ஜனவரி 29 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
01 Feb 2026


