நிகழ்வு-செய்தி
ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழு கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது
ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கர்னல் Brandon Wood தலைமையிலான ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறியைப் பயிலும் மாணவர்கள் குழு, 2025 அக்டோபர் 21 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சற்திப்பிற்காக சந்தித்தனர்.
22 Oct 2025
இலங்கைக்கான தாய்லாந்து தூதர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான தாய்லாந்து தூதரான, திரு Paitoon Mahapannaporn அவர்கள் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
22 Oct 2025
எலஹெரவில் கடற்படையால் நிறுவப்பட்ட 03 நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், திருகோணமலை மொரவெவ வடக்கு சிங்களக் கல்லூரி, அனுராதபுரம் மாவட்டத்தில் நாச்சதுவ அ/திவுல்வெவ கல்லூரி வளாகம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை கிராமத்தில் நிறுவப்பட்ட மூன்று (03) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 அக்டோபர் 14, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் திறந்து வைக்கப்பட்டன.
22 Oct 2025
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பட்டறை
கிழக்கு கடற்படை கட்டளை மருத்துவமனை மற்றும் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த, மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பட்டறை, திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் 2025 அக்டோபர் 14 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.
21 Oct 2025
கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளையாக் கொமடோர் தனேஷ் பத்பேரிய கடமைகளை பொறுப்பேற்றார்
கடற்படை ஏவுகணை கட்டளையின் கொடி அதிகாரியாக நியமிக்கப்பட்ட கொமடோர் தனேஷ் பத்பேரிய அவர்கள் 2025 அக்டோபர் 14 ஆம் திகதி திருகோணமலை கடற்படை நிறுவனத்தில் உள்ள கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளை அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
17 Oct 2025
தப்போவ சரணாலயத்தைச் சுற்றி 'யானை வளப்படுத்தும் வலயத்தை' நிறுவுவதற்கான க்ளீன் ஶ்ரீ லங்கா' தேசிய திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
க்ளீன் ஶ்ரீ லங்கா' தேசிய திட்டத்தின் கீழ், புத்தளம் மாவட்டத்தில் உள்ள தப்போவ சரணாலயத்திற்கு அருகில், பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் 'யானை வளப்படுத்தும் வலயத்தை' நிறுவுவதற்காக, 2025 அக்டோபர் 10 முதல் 12 வரை குளங்களை சுத்தம் செய்யும் திட்டம் நடைபெற்றது.
14 Oct 2025
2025 கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்புப் போட்டித் தொடரில் ஏவுகனைக் கட்ளை முதல் இடத்தை வென்றது
மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமாரவின் தலைமையில், இலங்கை கடற்படைக் கப்பலான 'சிக்ஷா' வில் 2025 அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான அணிவகுப்புப் போட்டி நடைபெற்றதுடன், இதில் 2025 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கு இடையேயான அணிவகுப்புப் போட்டித் தொடரில் ஏவுகனைக் கட்டளை முதலிடத்தைப் பிடித்தது.
14 Oct 2025
கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 மார்ச் 14 அன்று வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது, வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள், மாலுமிகளை சந்தித்து உரையாற்றினார். கடற்படையின் நடவடிக்கைகள், பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் மேம்பாட்டு மற்றும் நலன்புரி திட்டங்களை திறம்பட நடத்துவதற்கான அறிவுரைகளை வழங்கினார். மேலும், இவ் கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு கடற்படையின் பொறுப்புகள் குறித்து விளக்கினார்.
14 Oct 2025
TECHNO 2025 இல் கடற்படை பொறியியல் கண்டுபிடிப்பு சிறப்பம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டது
இலங்கை பொறியாளர்கள் நிறுவனம் (IESL) ஏற்பாடு செய்த TECHNO 2025 பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியான, 2025 அக்டோபர் 10 முதல் 12 வரை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது, அங்கு இலங்கை கடற்படையின் பொறியியல் கண்டுபிடிப்பு சிறப்பம்சங்கள் காட்சிப்படுத்தினர்.
13 Oct 2025
பாகிஸ்தானின் தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் கடற்படைத் தளபதியை சந்தித்தனர்
பாகிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தின் (National Radio and Telecommunication Corporation - NRTC) பிரதிநிதிகள் இன்று (2025 அக்டோபர் 08) கடற்படைத் தலைமையகத்தில் விசேட சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்தனர்.
13 Oct 2025


