நிகழ்வு-செய்தி
பயிற்சித் திட்டத்திற்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘INS NIREEKSHAK’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், (Mixed Gas Diving Training) திட்டத்தை நடத்துவதற்காக இன்று காலை (2026 ஏப்ரல் 21) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை வரவேற்றனர்.
21 Apr 2026
நல்லெண்ணப் பயணத்திற்காகத் தீவிற்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பல் தீவிலிருந்து புறப்பட்டது
2026 ஏப்ரல் 15 ஆம் திகதி நல்லெண்ணப் பயணமாக தீவிற்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பல், தனது நல்லெண்ணப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, 2026 ஏப்ரல் 18 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
19 Apr 2026
வடக்குப் பிராந்தியத்தில் உள்ள மீனவ சமூகத்தினரின் பங்கேற்புடன், கடற்படை உயிர் காத்தல் மற்றும் அடிப்படை முதலுதவித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது
இலங்கைக் கடற்படையானது, கடலோரக் காவல்படை மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, 2026 ஏப்ரல் 09 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள மைலடி மீன்பிடித் துறைமுகத்தில், மீனவ சமூகத்தினரின் பங்கேற்புடன், கடலில் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அத்தியாவசிய உயிர் காத்தல் மற்றும் அடிப்படை முதலுதவி குறித்த விழிப்புணர்வு திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.
16 Apr 2026
கடற்படை பொது மருத்துவமனையின் உள்நோயாளிகளின் நலனுக்காக கடற்படை சங்கத்தால் வழங்கிய நன்கொடை
இலங்கை கடற்படை சங்கம், 2026 ஏப்ரல் 07 ஆம் திகதியன்று, கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக, அத்தியாவசிய ஆடைத் தொகுப்புகள், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை மருத்துவமனை வளாகத்தில் நன்கொடையாக வழங்கியது.
16 Apr 2026
நல்லெண்ண வருகைக்காக தீவிற்கு வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களான ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகியவை தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றன
பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக 2026 ஏப்ரல் 12 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததையடுத்து, அந்த இரு கப்பல்களின் நல்லெண்ண வருகையானது நிறைவடைந்த பின் 2026 ஏப்ரல் 13 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டன. ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய இரு கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் தனது கடற்படை மரபுகளின்படி கப்பல்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் பிரியாவிடை அளித்தனர்.
15 Apr 2026
சிறப்பு படகுகள் படைப்பிரிவுப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன
இலங்கை சிறப்பு படகுகள் படைப்பிரிவின் 32வது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இருபத்து நான்கு (24) மாலுமிகளுக்கு பதக்கங்கள் அணிவித்தல், அந்த படைப்பிரிவின் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான கமாண்டர் லக்மால் வீரக்கொடியின் அழைப்பின் பேரில், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி திருகோணமலை, கடற்படைத் தளத்தில் உள்ள சிறப்புக் படகுகள் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
11 Apr 2026
தென்கடலில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மீனவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படையின் உதவி
இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகில் படுகாயமடைந்திருந்த ஒரு மீனவரை, 2026 ஏப்ரல் 09 ஆம் திகதி காலையில், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து, இலங்கை கடற்படையினரால் சிகிச்சை அளிப்பதற்காக அவசரமாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
10 Apr 2026
கடற்படையால் நிறுவப்பட்ட 1153வது நீர் சுத்திகரிப்பு நிலையம் அனுராதபுரத்தில் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டச் செயலக வளாகத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 08 ஏப்ரல் 2026 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
10 Apr 2026
ஜிசிஇ உயர்நிலை, சாதாரண நிலை மற்றும் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகளில் சிறந்து விளங்கிய கடற்படை வீரர்களின் பிள்ளைகளுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்
2024 ஆம் ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் உயர் நிலை, சாதாரண நிலை மற்றும் 2025 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வில் சிறப்புத் தகுதியுடன் தேர்ச்சி பெற்ற, பணிபுரியும் மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களின் ஐந்நூற்று ஐம்பத்திரண்டு (552) பிள்ளைகளுக்கு, கடற்படை நலநிதியின் பங்களிப்புடன் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொடாவின் தலைமையில், பதின்மூன்று (13) கல்வி உதவித்தொகை பெறுபவர்களுக்கு கல்வி உதவித்தொகை பணப் பரிமாற்றச் சீட்டுகள் அடையாளப்பூர்வமாக வழங்கும் நிகழ்வு 06 ஏப்ரல் 2026 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
08 Apr 2026
கடற்படையின் பங்களிப்புடன், கொழும்புத் துறைமுகத்தில் உள்ள UCT இறங்குத்துறையில், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் குறித்த பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது
இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அவசர அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயிற்சி ஒத்திகையை, இலங்கை கடற்படையானது 31 மார்ச் 2026 அன்று கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஒற்றுமை கொள்கலன் முனைய (UCT) இறங்குதுறையில் வெற்றிகரமாக நடத்தியது.
07 Apr 2026


