நிகழ்வு-செய்தி

கிழக்கு கடற்படை கட்டளையில் "கடல் போர்" குறித்த சிறப்பு சொற்பொழிவை வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னையா (ஓய்வு) இனால் நிகழ்த்தப்பட்டது

கடற்படை ஏவுகனைக் கட்டளையில், கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் பயிற்சியாளர்களின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் தொழில்முறை அறிவை மேம்படுத்துவதற்கான 2025 அக்டோபர் 04 மற்றும் 05 ஆகிய இரு தினங்களில், இவ் பாடநெறி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவின் மேற்பார்வையில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்றதுடன், மேலும் (Littoral Warfare) என்ற கருப்பொருளில் அட்மிரல் டிரவிஸ் சின்னையா (ஓய்வு) விருந்தினர் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

13 Oct 2025

நாகதீபம் புராண ரஜ மகா விஹாரையில் ஆண்டுதோறும் நடைபெறும் கடின மகோற்சவம் கடற்படையின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெறுகிறது

யாழ்ப்பாணம் நயினாதீவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப புராண ரஜ மகா விகாரையில் வருடாந்த கடின புண்ணிய மகோற்சவம் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரின் ஈடுபாட்டுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.

12 Oct 2025

‘சயுருசர’ சஞ்சிகையின் 49வது இதழின் வெற்றியாளர்களுக்கு கடற்படைத் தளபதி பாராட்டு தெரிவித்தார்

கடற்படை ஊடக இயக்குநர் காரியாலயத்தால் வெளியிடப்பட்ட ‘சயுருசர’ சஞ்சிகையின் 49வது இதழில் படைப்பு கவிதைகள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை சமர்ப்பித்த கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு விருதுகளை வென்றவர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இன்று (2025 அக்டோபர் 08) கடற்படை தலைமையகத்தில் பணப் பரிசுகளை வழங்கினார்.

08 Oct 2025

இலங்கை கடற்படை சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் உரையாற்றினார்

இலங்கை கடற்படை தலைமையகத்திற்கு இன்று (அக்டோபர் 7) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேட்கொண்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அங்கு கடற்படை சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்தினார்.

08 Oct 2025

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு வலுவான கூட்டுத் திட்டத்திற்காக கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் வடமேற்கு மாகாண மீனவ சமூகம் இணைந்து செயல்படுகின்றது

வடமேற்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழலில் ஏற்படும் பாதகமான தாக்கம் மற்றும் கடல் வழிகளில் நடைபெறும் கடத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி, வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில், மாகாணத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சட்ட அமலாக்க முகவர்கள் மற்றும் வடமேற்கு மாகாண மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன், 2025 அக்டோபர் 02 அன்று நடைபெற்றது.

08 Oct 2025

கடல்சார் மற்றும் கடலோரப் பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதில் கடற்படை முன்னிலை வகிக்கிறது

கிழக்கு மாகாணத்தில் கடல்சார் மற்றும் கடலோரப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு கூட்டு அணுகுமுறை மூலம் தீர்வு காண தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான சிறப்பு கலந்துரையாடல், திருகோணமலை கடற்படை கப்பல்துறையில், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசு நிறுவனங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் 2025 அக்டோபர் 02 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

08 Oct 2025

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முப்படை மருத்துவ முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைமையில் மன்னார் பேசாலையில் மருத்துவ மற்றும் பல் மருத்து சிகிச்சைகள் நடத்தப்பட்டன

2025 டிசம்பர் 9 ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், அக்டோபர் 5 முதல் டிசம்பர் 26 வரை சிறப்பு நிகழ்ச்சித் தொடரை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் தொடரின் தொடக்கமாக, முப்படை மருத்துவ முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைமையில், கடற்படை மருத்துவ மற்றும் பல் மருத்துவத் துறைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நடமாடும் மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சை இன்று (2025 அக்டோபர் 5) மன்னார் பேசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

05 Oct 2025

‘USS FITZGERALD’ தீவை விட்டு புறப்பட்டது

விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பலான 'USS FITZGERALD' (DDG 62), 2025 அக்டோபர் 04 தீவிலிருந்து புறப்பட்டது, மேலும் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளுக்கு இணங்க கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

05 Oct 2025

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜகத் குமார பொறுப்பேற்கிறார்

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ஜகத் குமார, 2025 அக்டோபர் 03 அன்று வெலிசரவில் உள்ள தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் இலங்கை தன்னார்வ கடற்படையின் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

04 Oct 2025

கப்பல் பாதுகாப்பு குழுக்களுக்கு ஆதரவு நடவடிக்கைகளை வழங்க கடற்படை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

(Onboard Security Team - OBST) இற்காக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களை இலங்கை கடற்படையின் ஆயுதக் களஞ்சியங்களில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களை சேமித்து வைப்பதற்கும், செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப, இலங்கை கடற்படையின் மேற்பார்வை மற்றும் பாதுகாப்பின் கீழ், வெளிநாட்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் உள்ளூர் பிரதிநிதிகளால் வழங்கப்படும் வாகனங்கள் அல்லது கப்பல்களைப் பயன்படுத்தி அத்தகைய துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களை கொண்டு செல்வதற்கும் வசதியாக, கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களின் இரண்டு (02) உள்ளூர் பிரதிநிதிகளுடன் இலங்கை கடற்படை 2025 அக்டோபர் 03 அன்று கடற்படை தலைமையகத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டப்பட்டது.

04 Oct 2025