நிகழ்வு-செய்தி

கடற்படை கௌரவங்களுக்கு மத்தியில் ரியர் அட்மிரல் ரொஹான் திசாநாயக்க கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றார்

இலங்கைக் கடற்படையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ரியர் அட்மிரல் ரொஹான் திசாநாயக்க, இன்று (06 ஜனவரி 2026) கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றார்.

06 Apr 2026

ஹம்பந்தோட்டை துறைமுக வளாகத்திற்குள் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அபாயங்கள் குறித்த வெற்றிகரமான பயிற்சி ஒத்திகையை கடற்படை நடத்தியது

2026 ஆம் ஆண்டு மார்ச் 04 முதல் 13 வரை, காவன்திஸ்ஸ என்ற இலங்கை கடற்படைக் கப்பலிலும், ஹம்பந்தோட்டை சர்வதேச துறைமுக வளாகத்தின் கொள்கலன் முற்றத்திலும், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அவசர அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயிற்சி ஒத்திகையை இலங்கை கடற்படை வெற்றிகரமாக நடத்தியது.

06 Apr 2026

கடற்படையால் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது கல்நேவயில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது

பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது கடற்படையின் சமூக சேவைத் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனுராதபுரம் நேகம சிறிசுமன வித்யாலயத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 மார்ச் 27 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

31 Mar 2026

அவசர மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டுக் கப்பல் பணியாளர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கரைக்கு அழைத்து வந்தனர்

சீனக் கொடி ஏற்றப்பட்ட வெளிநாட்டுக் கப்பல் ஒன்றில் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட பணியாளர் ஒருவர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து செயல்பட்ட ஒரு கடற்படைக் கப்பலால் 2026 மார்ச் 27 ஆம் திகதி கரைக்கு விரைவாக அழைத்து வரப்பட்டு, கப்பலின் உள்ளூர் பிரதிநிதி அலுவலகத்தின் உதவியுடன் சிகிச்சைக்காக காலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு உட்படுத்தப்பட்டார்.

28 Mar 2026

Marines Field Training Exercise “Blue Whale – 2026” திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவினரால் நான்காவது (04) முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட Blue Whale – 2026 பயிற்சி, கடற்படை காலாட்படைத் தளபதி, ரியர் அட்மிரல் ரொஹான் திசாநாயக்கவின் தலைமையில் 2026 மார்ச் 20 அன்று தொடங்கியது. கிழக்குக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு, 2026 மார்ச் 26 வெற்றிகரமாக நிறைவுபெற்றதுடன், இப்பயிற்சியின் இறுதி பயிற்சி, கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியான ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவின் தலைமையில், திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் விதுரவில் அமைந்துள்ள மரைன் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

28 Mar 2026

வழங்கல்கள் மற்றும் சேவைகளுக்காக மின்னணு கொள்முதல் முறையைச் இலங்கை கடற்படை செயல்படுத்துகிறது

மின்னணு அரசாங்க கொள்முதல் (Electronic Government Procurement - e-GP) முறையைச் செயல்படுத்தும் முன்னெடுப்புகளுக்கு இணங்க, கடற்படை வழங்கல்கள் மற்றும் சேவைகள் தொடர்பான மின்னணு கொள்முதல் முறையைச் செயல்படுத்துவதைக் குறிக்கும் வகையில், இலங்கை கடற்படையினரால் செயல்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டம் குறித்த ஒரு சிறப்புக் கலந்துரையாடல், 2026 மார்ச் 13 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் வழங்கல்கள் மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் நடைபெற்றது.

24 Mar 2026

இலங்கை பாதுகாப்பு தூதுக்குழு ஜப்பானில் உயர்மட்ட சந்திப்புகளில் மேட்கொண்டது

இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு தூதுக்குழு, 2ஆம் ஜப்பான்–இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தைத் மேட்கொண்டது. இந்த முக்கிய நிகழ்வு, குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான நீண்டநாள் நட்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

20 Mar 2026

GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சிறப்புத் தூதுவர் கோர் சந்தித்தார்

எமது நீண்டகால கடல்சார் பங்காண்மையின் வலிமையினை அடையாளப்படுத்தும் வகையில் தற்போது இலங்கை கடற்படையில் சேவையிலீடுபட்டுள்ள முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான SLNS GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சிறப்புத் தூதுவர் கோர் சந்தித்தார். இலங்கையை வந்தடைவதற்காக பசிபிக் சமுத்திரத்தினூடாக தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் நான்காவது முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான ex-DECISIVE எமது கடல்சார் பாதுகாப்புப் பங்காண்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்தும்.

20 Mar 2026

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் “JMSDF OONAMI” தீவை உத்த்யோகப்பூர்வ விஜயத்தை முடித்துவிட்டு தீவிலிருந்து புறப்படுகிறது

ஜப்பானிய கடற்படை தற்காப்புப் படையின் கப்பலான “JMSDF OONAMI” உத்த்யோகப்பூர்வ விஜயத்திற்காக 2026 மார்ச் 09 ஆம் திகதி தீவை வந்தடைந்ததுடன், உத்த்யோகப்பூர்வ விஜயத்தை முடித்துவிட்டு, சேவைத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர், 2026 மார்ச் 11 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட்டது. மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளுக்கு இணங்க குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பிரியாவிடை அழித்தனர்.

18 Mar 2026

உலக உடல் பருமன் தின விழிப்புணர்வு நடைபயணத்தில் இலங்கை கடற்படை பங்கேற்பு

உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு “Healthy Weight – Wealthy Life.” என்ற கருப்பொருளின் கீழ், கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவைச் சுற்றிய பகுதியில் 2026 மார்ச் 07 ஆம் திகதி நடைபெற்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நடைபயணத்தில் இலங்கை கடற்படை கலந்து கொண்டது.

17 Mar 2026