நிகழ்வு-செய்தி
கடற்படையின் பயிற்சிப் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் புத்திக லியங்கமகே கடமைகளைப் பொறுப்பேற்றார்

ரியர் அட்மிரல் புத்திக லியனகம இலங்கை கடற்படையின் பயிற்சிப் பணிப்பாளர் நாயகமாக இன்று (03 ஜூன் 2024) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் பயிற்சி அலுவலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
03 Jun 2024
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் புதிய தளபதியாக கொமடோர் ரொஹான் ஜோசப் பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் முதன்மை பயிற்சி நிறுவனமான திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் 40வது கட்டளை அதிகாரியாக கொமடோர் ரொஹான் ஜோசப் 2024 மே 30 ஆம் திகதி பதவியேற்றார்.
30 May 2024
கடற்படையின் இரத்த தானம் திட்டம்
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று இன்று (2024 மே 29,) வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.
29 May 2024
தியவன்னா வெசாக் வலயத்தின் 3வது நாள் கடற்படைத் தளபதி தலைமையில் ஆரம்பமானது

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திவவன்னா வெசாக் வலயத்தின் மூன்றாம் நாளை வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் 2024 மே 25 ஆம் திகதி ஆரம்பமானது.
26 May 2024
சமய பழக்கவழக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடற்படை வெசாக் பண்டிகையை கொண்டாடுகிறது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படையினர் 2024 மே 23 ஆம் திகதி வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். மாத்தளை தர்மராஜ பிரிவெனவில் பௌத்தலோக வெசாக் வலயம், புத்த ரஷ்மி வெசாக் வலயம், தியவண்ணா உயன வெசாக் வலயம், மஹர-கடவத்த வெசாக் வலயம், கொள்ளுப்பிட்டி வழுகாராமய வெசாக் வலயம் ஆகிய நிகழ்வுகளில் அவர்கள் பங்குபற்றினர்.
24 May 2024
வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமஹா விகாரையில் நடைபெற்ற கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வில் கடற்படைத் தளபதி கலந்துகொண்டார்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமஹா விகாரையின் கோபுரத்தை திறந்து வைக்கும் விழா 2024 மே 23 ஆம் திகதி கோட்டே ரஜமஹா விகாரை வளாகத்தில் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் வணக்கத்துக்குரிய மகா சங்கரத்திரனின் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றது.
24 May 2024
விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத 1289 கடற்படையினர் பொது மன்னிப்புக் காலத்தில் சரணடைந்துள்ளனர்

2024 ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் 2024 மே 20 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் விடுப்பு இன்றி பணிக்கு வராத ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு (1254) மாலுமிகள் கடற்படை முகாம்களுக்கும் முப்பத்தைந்து (35) வெளிநாட்டு மாலுமிகள் ஆன்லைன் அமைப்பு மூலமும் சரணடைந்துள்ளனர்.
24 May 2024
கொமடோர் ரவி குணசிங்க கடற்படையின் பதில் சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் பதில் சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் ரவி குணசிங்க இன்று (2024 மே 21,) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
21 May 2024
கடற்படையின் இரத்த தானம் திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகச் செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று இன்று (2024 ஏப்ரல் 20) கிழக்கு கடற்படை கட்டளையின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
21 May 2024
ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 மே 21) ஓய்வு பெற்றார்.
21 May 2024