நிகழ்வு-செய்தி
கடற்படை தளபதி தென் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் நேற்று பெப்ரவரி 20 ஆம் திகதி தென் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். அங்கு தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்களினால் கடற்படை தளபதி அவர்களை உற்சாகமாக வரவேற்கப்பட்டுள்ளது.
21 Feb 2019
திருகோணமலையில் மணல் அகழ்வுக்காக பொருத்தமான இடங்களை அடையாளம் காண கடற்படை ஆதரவு

2019 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மகாவலி ஆற்றில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பின் பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பாக ஒரு முறையான ஆய்வு நடத்த புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது. மேலும் இதுக்காக இலங்கை கடற்படை அதிகாரிகளின் உதவியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
21 Feb 2019
இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் நலீன் நவரத்ன கடமையேற்பு

இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான சிந்துரல கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் நலீன் நவரத்ன அவர்கள் இன்று (பெப்ருவரி 21) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
21 Feb 2019
இலங்கை கடற்படைக் கப்பல் 'சயுரள' அபுதாபியில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்துள்ளது

கடந்த பெப்ருவரி 17 ஆம் திகதி அபுதாபியில் தொடங்கிய சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில் 2019 (International Defence Exhibition & Conference) பங்குபெற்ற சயுரல கப்பல் நேற்று (பெப்ருவரி 20) பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்துள்ளது.
21 Feb 2019
கடற்படையினரினால் உல்லக்காலை களப்பு பகுதியில் இருந்து சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (பெப்ரவரி 20) உல்லக்காலை களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது சுமார் 150 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலைகள் 05 கைப்பற்றப்பட்டன.
21 Feb 2019
சங்கு சிப்பிகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (பெப்ரவரி 20) கற்பிட்டி மொஹொதுவாரம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத 24 சங்கு சிப்பிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
21 Feb 2019
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் பதிமூன்று பேர் (13) கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் பதிமூன்று பேர் (13) நேற்று (பெப்ருவரி 20) வடக்கு கடற்படைக் கட்டளையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலின் மற்றும் விரைவு தாக்குதல் படகுகளின் இனைக்கப்பட்ட கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.
21 Feb 2019
மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (பெப்ருவரி 20) புல்மூடை பொல்மல்குடா கடற்கரையில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கைது செய்யப்பட்டுள்ளது.
21 Feb 2019
இலங்கை கடற்படை கப்பல் சயுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் கோசல வர்னகுலசூரிய கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான சயுர கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் கோசல வர்னகுலசூரிய அவர்கள் இன்று (பெப்ரவரி 18) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
18 Feb 2019
உல்லக்கலை களப்பு பகுதியில் விரிக்கப்பட்டிருந்த சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (பெப்ரவரி 17) உல்லக்கலை களப்பு பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகாக விரிக்கப்பட்டிருந்த 150 அடி நீளமான 07 தடைசெய்யப்பட்ட நைலான் வலைகள் கைப்பற்றப்பட்டன.
18 Feb 2019