நிகழ்வு-செய்தி

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட பதவியேற்பு

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட இன்று (2024 ஜனவரி 22) வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

22 Jan 2024

கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2024 ஜனவரி 21 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, குறித்த கட்டளையினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள், அபிவிருத்தி மற்றும் நலன்புரி செயற்திட்டங்களை அவதானித்ததுடன், அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு அவர்களின் பணிகள் குறித்து தெரியப்படுத்தினார்.

22 Jan 2024

இலங்கை கடற்படை வீர்ர் ஆர்.பி.சமன் குமார சிறிவர்தன 586.1 கிலோமீற்றர் தூரம் நடந்து புதிய இலங்கை சாதனையை படைத்துள்ளார்

இலங்கை கடற்படை வீரர் ஆர்.பி.சமன் குமார சிறிவர்தன 586.1 கி.மீ தூரம் பூனேவவிலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு பயணித்து மீண்டும் புனேவவிற்கு 07 நாட்கள் 11 மணிநேரம் 17 நிமிடங்கள் 14 வினாடிகளில் பயணம் செய்து 2024 ஜனவரி 19 ஆம் திகதி புதிய இலங்கை சாதனையை படைத்தார்.

20 Jan 2024

வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நளின் நவரத்ன பதவியேற்பு

வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நளின் நவரத்ன இன்று (2024 ஜனவரி 19) வட மத்திய கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

19 Jan 2024

ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

36 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 16) ஓய்வு பெற்றார்.

16 Jan 2024

580 கிலோமீற்றர் தூரம் நடந்து இலங்கையின் புதிய சாதனையை படைக்கவுள்ள கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே சிறிவர்தன நான்காவது நாள் நடைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்

08 நாட்களில் 580 கிலோமீற்றர் தூரம் நடந்து புதிய இலங்கை சாதனையைப் படைக்கும் நோக்கில் 2024 ஜனவரி 12 ஆம் திகதி வவுனியாவில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்த கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே.சிறிவர்தன, நான்காவது நாள் நடைபயணத்தை 2024 ஜனவரி 15 ஆம் திகதி மாலைக்குள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

16 Jan 2024

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் மகேஷ் டி சில்வா பதவியேற்பு

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் மகேஷ் டி சில்வா இன்று (2024 ஜனவரி 15) தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

15 Jan 2024

ரியர் அட்மிரல் தம்மிக்க குமார கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் தம்மிக்க குமார தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 15) ஓய்வு பெற்றார்.

15 Jan 2024

08 நாட்களில் 580 கிலோமீற்றர் தூரம் நடந்து இலங்கையின் புதிய சாதனையைப் படைக்கவுள்ள கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே சிறிவர்தன மூன்றாவது நாள் நடைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்

08 நாட்களில் 580 கிலோமீற்றர் தூரம் நடந்து புதிய இலங்கை சாதனை படைக்கும் நடைபயணத்தை 2024 ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பித்த கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே.சிறிவர்தன மூன்றாம் நாளை 2024 ஜனவரி 14 ஆம் திகதி மாரவில பிரதேசத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

15 Jan 2024

வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நளிந்திர ஜயசிங்க பதவியேற்பு

வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நளிந்திர ஜயசிங்க இன்று (2024 ஜனவரி 12) வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.

12 Jan 2024