நிகழ்வு-செய்தி
மீனவ சமூகத்தை மிகவும் பாதுகாப்பானதாக்க கடற்படையின் அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன
இலங்கை கடற்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் துறையுடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி (Basic Life Support - BLS) பயிற்சித் திட்டத்தை 2025 அக்டோபர் 03 ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை மையமாகக் கொண்டு இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
03 Oct 2025
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS FITZGERALD’ என்ற கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS FITZGERALD’ (DDG 62) இன்று (2025 அக்டோபர் 03) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.
03 Oct 2025
இலங்கை தன்னார்வ கடற்படையின் 2025 வருடாந்திர பயிற்சி முகாமின் பிரிவுகளின் ஆய்வு கடற்படைத் தலைமை அதிகாரியின் தலைமையில் வெலிசரவில் நடைபெற்றது
இலங்கை தன்னார்வ கடற்படையின் 2025 வருடாந்திர பயிற்சி முகாமின் முடிவைக் குறிக்கும் பிரிவுகளின் ஆய்வு மற்றும் அணிவகுப்பு இன்று (2025 அக்டோபர் 02) வெலிசரவில் உள்ள இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா மற்றும் தன்னார்வ கடற்படையின் கட்டளை அதிகாரி கமாண்டர் அனுர கருணாரத்ன ஆகியோரின் அழைப்பின் பேரில் கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
02 Oct 2025
கடற்படையினால் மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்புடன், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலகத்தின் வில்கமுவ பிரதேச சபையிலும், இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் நிதி பங்களிப்புடன், அனுராதபுரம் மாவட்டத்தின் மஹாவிலச்சிய பிரதேச செயலகத்தின் ஓயாமடுவ ஸ்ரீ சம்புத்த மைத்ரி விஹாரையிலும் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 செப்டம்பர் 20 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.
01 Oct 2025
தெற்காசிய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு கடற்படைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தனர்
தெற்காசிய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (South Asian Sustainability & Security Research Institute - SASSRI) பேராசிரியர் Christian Kaunert உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று 2025 செப்டம்பர் 26 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.
27 Sep 2025
‘மாறிவரும் இயக்கவியலுக்கு முகங்கொடுக்கும் வகையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பார்வை’ என்ற கருப்பொருளில் வெற்றிகரமான கலந்துரையாடலுடன் 12வது காலி உரையாடல் நிறைவடைந்தது
‘மாறிவரும் இயக்கவியலுக்கு முகங்கொடுக்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் தொலைநோக்குப் பார்வை’ (‘Maritime Outlook of the Indian Ocean under Changing Dynamics’) என்ற கருப்பொருளின் கீழ், இலங்கை கடற்படை பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த 12வது காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு – 2025 பிராந்திய கடல்சார் சூழல், கடல்சார் நிர்வாகம், கடல்சார் பொருளாதாரம் மற்றும் கடல்சார் நிலைத்தன்மை குறித்த வெற்றிகரமான அறிவார்ந்த கலந்துரையாடல்களுக்குப் பிறகு 2025 செப்டம்பர் 25 அன்று நிறைவடைந்தது.
26 Sep 2025
12வது காலி உரையாடலில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளால் பிராந்திய கடல்சார் ஒத்துழைப்புக்கான இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட்டது
12வது காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டுடன் இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு கடற்படைத் தலைவர்கள் உட்பட கடல்சார் பங்குதாரர்களுடன் இருதரப்பு உத்தயோகப்பூர்வ சந்திப்புகளை நடத்தினார், மேலும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். இந்த நிகழ்வில், பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதில் இலங்கை கடற்படையின் அர்ப்பணிப்பை வெளிநாட்டு பிரதிநிதிகள் குறிப்பாகப் பாராட்டினர்.
26 Sep 2025
ராகம புகையிரத நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வதில் கடற்படையின் பங்களிப்பு
இலங்கை தன்னார்வ கடற்படையின் 2025 வருடாந்திர பயிற்சி முகாமுடன் இணைந்து, 'க்ளீன் ஶ்ரீ லங்கா' தேசிய திட்டத்தின் கீழ் ராகம புகையிரத நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்வதற்கான சமூக பங்களிப்பானது 2025 செப்டம்பர் 22, அன்று நடைபெற்றது.
26 Sep 2025
குருநாகல் மாவட்டத்தில் கடற்படையால் நிறுவப்பட்ட 05 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், சுகாதார அமைச்சின் தலைமையின் கீழ் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்புடன், குருநாகல் மாவட்டத்தின் மஹவ, பிங்கிரிய, குருநாகல், நிகவெரடிய மற்றும் ரஸ்நாயக்கபுர பிரதேச செயலகப் பிரிவுகளில் நிறுவப்பட்ட ஐந்து (05) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 செப்டம்பர் 17, 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.
26 Sep 2025
இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் எல்லை சேவைகள் முகமையின் பிராந்திய இயக்குநர், கடற்படைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்
இலங்கையில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் எல்லை சேவைகள் முகமையின் பிராந்திய இயக்குநர் Joshua Newby கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 செப்டம்பர் 23 அன்று கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.
26 Sep 2025


