நிகழ்வு-செய்தி

கடற்படை தாதி கல்லூரியில் தாதி பாடநெறியை முடித்த 41 பேர் தாதி உறுதிமொழியை வழங்கினர்

சர் ஜான் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷிலா நிறுவனத்தில் நிருவப்பட்ட கடற்படை தாதி கல்லூரியில் 2022 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பின் 41 கடற்படை மற்றும் விமானப்படை தாதிகளின் தொப்பி அணிவிப்பு மற்றும் தாதியர் உறுதிமொழி வழங்கும் விழா இன்று (2023 மே 15) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தின் அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார கல்லூரியின் பீடாதிபதி திரு. எஸ்.எஸ்.பீ வர்ணகுலசூரிய அவர்கள் கலந்து கொண்டார்.

15 May 2023

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற 32வது இளநிலை கடற்படைப் பணியாளர் பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவு பெற்றது

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற 32வது இளநிலை கடற்படைப் பணியாளர் பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2023 மே 11 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவின் தலைமையில் அட்மிரல் வசந்த கரண்னாகொட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

15 May 2023

250 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 388 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 250 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான நிரந்தர கடற்படையின் முந்நூற்று நாற்பத்தைந்து (345) கடற்படை வீரர்கள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நாற்பத்து மூன்று (43) கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2023 மே 13 ஆம் திகதி பூனாவை இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

14 May 2023

கடற்படைத் தளபதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்

வட மத்திய கடற்படை கட்டளைக்கு 2023 மே மாதம் 11 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா குறித்த கட்டளையின் செயற்பாட்டுத் தயார்நிலை, பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் நலன்புரி வசதிகள் குறித்து கவனம் செலுத்தியதுடன் கடற்படையின் எதிர்கால நோக்கங்கள், செயல்பாட்டு தயார்நிலை மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களின் மேலாண்மை குறித்து வட மத்திய கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு கூறினார்.

12 May 2023

கடற்படை வரலாற்றில் முதன்முறையாக பெண் மாலுமிகள் கடல் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்

கடற்படை பெண் மாலுமிகளுக்கான கடல் கடமைகளுக்கு வாய்ப்பை திறந்து வைக்கும் வகையில் இலங்கை கடற்படை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு (02) பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து (05) பெண் மாலுமிகள் அடங்கிய முதலாவது பெண் மாலுமிகள் குழு கடல் கடமைகளுக்காக இன்று காலை (11 மே 2023) இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் இணைக்கப்பட்டது,

11 May 2023

IMDEX ASIA - 2023 கடல்சார், பாதுகாப்பு கண்காட்சி மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

சிங்கப்பூர் சாங்கி கண்காட்சி மையத்தில் 2023 மே 03 முதல் 05 வரை நடைபெற்ற IMDEX ASIA – 2023 கடல்சார், பாதுகாப்பு கண்காட்சி மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் (International Maritime Security Conference – IMSC ) வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பங்கேற்றார்.

08 May 2023

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் பெரஹெர கடற்படையினரின் பங்களிப்புடன் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

2567 வது ஸ்ரீ சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரயை மையமாக கொண்டு நடைபெறுகின்ற புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் 2023 மே மாதம் 06 ஆம் திகதி இரவு பெரஹெர ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் அனுநாயக்க வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் அறிவுரைப்படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் கட்டளைப்படி கடற்படை பௌத்த சங்கத்தின் அனுசரணையில் வண்ணமயமாக நடத்த இலங்கை கடற்படை ஏற்பாடு செய்திருந்தது.

07 May 2023

சமய வழிபாட்டு முறைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கடற்படையினர் ஸ்ரீ சம்புத்த ஜயந்தியின் 2567வது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.

2023 மே மாதம் 05 ஆம் திகதி ஈடுபட்ட 2567 ஆவது ஸ்ரீ சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் கீழ், இலங்கை கடற்படை ஒவ்வொரு கடற்படை கட்டளையையும் உள்ளடக்கி பௌத்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது, மேலும், ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரயை மையமாகக் கொண்ட புத்த ரஷ்மி வெசாக் வலயம் மற்றும் அரச வெசாக் விழாவிற்கு பக்தியுடன் பங்களிப்பு வழங்கியது.

06 May 2023

இந்திய விமானப்படை தளபதி இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்தியவிமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதாரி, இன்று (2023 மே 02) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

02 May 2023

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் வழங்கிய பங்களிப்புக்காக, கடற்படை கப்பல்துறைக்கு ஜனாதிபதி சுற்றுச்சூழல் தங்க விருது வழங்கப்பட்டது

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2023 ஏப்ரல் 28 ஆம் திகதி இடம்பெற்ற 2021-2022 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில், இலங்கை கடற்படை திருகோணமலை கடற்படைத் கப்பல்துறையில் சுற்றாடல் பாதுகாப்புக்காக மேற்கொள்கின்ற சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்ட தங்க விருது கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார கௌரவ ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

02 May 2023