நிகழ்வு-செய்தி

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் கௌரவ திருமதி Rita Giuliana MANNELLA அவர்கள் இன்று (2023 மார்ச் 16) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

16 Mar 2023

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் புதிய கட்டளைத் தளபதியாக கொமடோர் புத்திக லியனகமகே கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இலங்கை கடற்படையின் முதன்மை பயிற்சி நிறுவனமான திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் 37வது கட்டளை அதிகாரியாக கொமடோர் புத்திக லியனகமகே 2023 மார்ச் 14 ஆம் திகதி பதவியேற்றார்.

16 Mar 2023

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் கிழக்கு கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் கலீட் நசார் சுலைமான் அல் அமெரி (HE Khaled Nassar Sulaiman Al Ameri) அவர்கள் இன்று (2023 மார்ச் 14) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், இலங்கை தொண்டர் கடற்படைத் தளபதியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவை சந்தித்தார்.

14 Mar 2023

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படையின் ‘USS CHARLESTON (LCS - 18)’ கப்பல் தீவை விட்டு புறப்பட்டுள்ளது

அமெரிக்க கடற்படையின் ‘USS CHARLESTON (LCS - 18)’ போர்க்கப்பல் 2023 மார்ச் மாதம் 11 ஆம் திகதி காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

12 Mar 2023

யாழ்ப்பாணம் பலைதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவை வெற்றிகரமான குறிப்பில் நடத்த கடற்படையின் உதவி

யாழ்ப்பாணம், பலைதீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா 2023 மார்ச் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இடம்பெற்றதுடன் இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

12 Mar 2023

சிறப்பு படகுகள் படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.

சிறப்பு படகுகள் படைப்பிரிவின் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 30 ஆவது படைப்பிரிவின் முப்பத்திரண்டு (32) கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2022 ஜூன் 05) திருகோணமலை கடற்படைத் தளத்தில் உள்ள சிறப்புக் கப்பல் படைத் தலைமையகத்தில் வைத்து அவர்களின் சின்னங்களை வழங்கி வைத்தார்.

11 Mar 2023

இலங்கையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதி இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமார் பாரூக் புர்கி (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 மார்ச் 09) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

09 Mar 2023

‘சயுருசர’ வின் 46 வது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது

கடற்படை ஊடகப் பிரிவினால் வெளியிடப்படுகின்ற சயுருசர சஞ்சிகையின் 46வது பதிப்பு அதன் பிரதம ஆசிரியர் லெப்டினன்ட் கமாண்டர் (தன்னார்வ) எஸ்.ஆர்.சுதுசிங்கவினால் இன்று (2023 மார்ச் 08) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் வழங்கப்பட்டது.

08 Mar 2023

திருகோணமலை அபேபுர பகுதியில் சமூக கண் சிகிச்சை மற்றும் சுகாதார திட்டமொன்று கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது

திருகோணமலை மற்றும் ஹந்தல சிங்கம் கழகங்கள் இணைந்து 2023 மார்ச் 05 ஆம் திகதி திருகோணமலை, அபேபுர சமூக சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக கண் சிகிச்சை மற்றும் தொற்றாத நோய் தடுப்பு திட்டத்துற்கு ஆதரவளிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

07 Mar 2023

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கடற்படையினரின் உதவியுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா கொழும்பு உதவி ஆயர் அருட்தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலாளர் ஏ. சிவபாலசுந்தரம் அவர்கள் மற்றும் கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் அமைப்பாளர்களின் பங்களிப்பின் பெருந்திரளான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன், 2023 மார்ச் 03 மற்றும் இன்று (2023 மார்ச் 04) வெகு விமரிசையாக நடைபெற்றதுடன் இறுதி பூஜை நிகழ்விற்காக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் பிரதிநிதியாக வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்கள் கலந்துகொண்டார்.

05 Mar 2023