நிகழ்வு-செய்தி
75 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் கொழும்பு கோட்டை ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாடு நடைபெற்றது
2025 டிசம்பர் 09 ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் ஆசிகளைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட தொடர் மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, 2025 நவம்பர் 22 ஆம் திகதி கொழும்பு கோட்டை, செத்தம் தெருவில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாடு நடைபெற்றது.
25 Nov 2025
75வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் ஒரு கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை
இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் நடத்தப்படும் மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை , கோட்டாஞ்சேனையில் உள்ள செயிண்ட் லூசியா கதீட்ரலில், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் தலைமையில், பிரதி தலைமை அதிகாரி,விநியோகம் மற்றும் சேவை இயக்குநர் ரியர் அட்மிரல் ருவன் கலுபோவிலன் தலைமையில், 2025 நவம்பர் 21 அன்று நடைபெற்றது.
25 Nov 2025
கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பு - 2025 குறித்த ஊடக சந்திப்பானது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து, சமூக, நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழல் முன்முயற்சிகளை உள்ளடக்கிய தொடர் நிகழ்ச்சிகளை நடத்த கடற்படை தயாராக உள்ளதுடன், இதன் கீழ், “Sailing Strong Together” என்ற கருப்பொருள் நடைபெறும். சர்வதேச போர்க்கப்பல்கள் கண்காணிப்பு - 2025 குறித்த ஊடக சந்திப்பு இன்று 2025 நவம்பர் 24 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
25 Nov 2025
வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவேந்தலின் அடையாளமாக கடற்படைச் சங்கத்தின் உறுப்பினர்கள் கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலரொன்று அணிவித்தனர்
போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் பிரச்சாரத்தையொட்டி, இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர், ரியர் அட்மிரல் மணில் மெண்டிஸ் (ஓய்வு) 2025 நவம்பர் 19 அன்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுக்கு பொப்பி மலரொன்று அணிவித்தார்.
25 Nov 2025
இந்திய கடற்படை போர்க்கப்பலான 'INS SUKANYA' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து தீவிலிருந்து புறப்பட்டது
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக 2025 நவம்பர் 18 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS SUKANYA', தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று 2025 நவம்பர் 21 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் அந்தக் கப்பலுக்கு கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக பிரியாவிடை அளித்தனர்.
21 Nov 2025
விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவுக்கு வந்த 'PNS SAIF' என்ற போர்க்கப்பல் தீவை விட்டு புறப்பட்டது
2025 நவம்பர் 18 ஆம் திகதி விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படை போர்க்கப்பலான ‘PNS SAIF’, இன்று காலை (2025 நவம்பர் 19) தீவை விட்டு புறப்பட்டதுடன். கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை அளித்தனர்.
19 Nov 2025
இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது
இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ 2025 நவம்பர் 18 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.
19 Nov 2025
உயிர்நீத்த ஆயுதப்படை வீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு கடற்படையின் பங்களிப்பு
முதலாம் உலகப் போருக்குப் பிறகு தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஆயுதப் படைகளின் உறுப்பினர்களின் உன்னத அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் நினைவு தினம், 2025 நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் உள்ள போர்வீரர்கள் நினைவுச்சின்னத்தில் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும் கடற்படை தலைமையகம் மற்றும் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் இவ் நினைவேந்தல் நிகழ்வினை கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.
18 Nov 2025
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை சிறப்பு நீரிழிவு மருத்துவ சிகிச்சையை நடத்தியது
2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, கொழும்பு கடற்படை பொது மருத்துவமனை வளாகத்தில் கடற்படை 2025 நவம்பர் 14 ஆம் திகதி சிறப்பு நீரிழிவு மருத்துவ சிகிச்சையை ஏற்பாடு செய்தது.
17 Nov 2025
4வது துரித தாக்குதல் படகு படையில் இணைந்து தாய்நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமிக்க கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை கடற்படையின் 4வது துரித தாக்குதல் படகு படையில் சேவையில் இருந்தபோது தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமிக்க கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது 2025 நவம்பர் 14 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறை தலைமையகத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவுச்சின்னத்தில் நடைபெற்றது. இதில் வீரமிக்க போர்வீரர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
17 Nov 2025


