வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதியில் இன்று (2023 ஜூன் 01) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மற்றும் மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தைந்து நபர்கள், ஆயிரத்து அறுபத்தெட்டு (1068) கடல் அட்டைகள், ஏழு (07) டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இன்று (2023 ஜூன் 01) அதிகாலை வடக்கு கடற்படை கட்டளையின் மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்படை பிரிவின் கடற்படையினர் மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். அப்போது குறித்த கடற்பகுதியில் இரவு நேர சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றும் மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபத்தைந்து (25) பேர், ஆயிரத்து அறுபத்தெட்டு (1068) கடல் அட்டைகள், ஏழு (07) டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 57 வயதுக்கு இடைப்பட்ட மன்னார், முள்ளியான், கன்னயன்காடு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த இருபத்தைந்து (25) நபர்கள், ஆயிரத்து அறுபத்தெட்டு (1068) கடல் அட்டைகள், ஏழு (07) படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.