'மஹமேருவ சுப்பர் கிராஸ்' ஓட்டப் பந்தயத்தில் மோட்டார் சைக்கிள் பிரிவில் பல வெற்றிகளை கடற்படை பெற்றுள்ளது

இலங்கை மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'மஹமேருவ சுப்பர் கிராஸ்' பந்தயப் போட்டித்தொடர் 2024 ஜனவரி 14 ஆம் திகதி கிரியுல்ல, மஹமேருவ பந்தயப் பாதையில் நடைபெற்றது, இதில் கடற்படை வீர்ர்கள் மோட்டார் சைக்கிள் பிரிவில் பல வெற்றிகளை பெற்றனர்.

பதினொரு (11) மோட்டார் சைக்கிள் போட்டிகள் மற்றும் பதினொரு (11) மோட்டார் வாகன போட்டிகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டித்தொடரில் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று (03) வீரர்கள் கலந்துகொண்டனர். அதன்படி, 125cc Racing போட்டியில் முதலாம் இடத்தை கடற்படை வீரர் ஈ.ஏ.பீ.என் எதிரிசிங்கவும், இரண்டாமிடத்தை கடற்படை வீரர் டி.எஸ்.எஸ்.எஸ் குமாரவும், 120cc Standard போட்டியின் இரண்டாமிடத்தை ஈ.ஏ.பீ.என் எதிரிசிங்கவும் பெற்றுக்கொண்டனர்.