விளையாட்டு செய்திகள்

‘DHAKA MARATHON - 2023’ இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனி சுஜானி மதுமாலி பெரேரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

2023 ஜனவரி 20 ஆம் திகதி பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற 42 கிலோ மீட்டர் மற்றும் 195 மீட்டர் தூர ‘DHAKA MARATHON - 2023’ மகளிர் மராத்தான் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனி சுஜானி மதுமாலி பெரேரா குறித்த போட்டியை 02 மணி 48 நிமிடம் 22 வினாடிகளில் முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், இலங்கை கடற்படைக்கும் தாய்நாட்டிற்கும் பெரும் புகழைக் கொண்டு வந்தார்.

22 Jan 2023

“Dr Nihal Jinasena Memorial Cup annual Sailing Regatta - 2022” பாய்மரப் படகுப் போட்டித்தொடரில் கடற்படை விளையாட்டு வீரர்களுக்கு பல வெற்றிகள்

“Dr Nihal Jinasena Memorial Cup annual Sailing Regatta - 2022” பாய்மரப் படகுப் போட்டித்தொடர் 2022 டிசம்பர் 03 ஆம் திகதி வெலிகம, மிரிஸ்ஸ கப்பரதொட கடற்கரையில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதில் கடற்படை பாய்மரக் குழு பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

05 Dec 2022

பாதுகாப்பு சேவை கைப்பந்து ஆண்கள் சாம்பியன்ஷிப்பை இலங்கை கடற்படை வெற்றி பெற்றது

பன்னிரண்டாவது (12) பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடரில் - 2022/23, பாதுகாப்பு சேவை கைப்பந்து போட்டிகள் 2022 நவம்பர் 09, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மினுவாங்கொடை ‘Airport Sports Complex’ யில் நடைபெற்றதுடன் அங்கு கடற்படை ஆண்கள் கைப்பந்து அணி பாதுகாப்பு சேவை கைப்பந்து சாம்பியன்ஷிப்பை வெற்றி பெற்றது.

12 Nov 2022

12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் இரண்டாம் இடத்தை கடற்படை வென்றது

12வது பாதுகாப்பு சேவைகள் கயிறு இழுத்தல் போட்டித்தொடர் 2022 ஒக்டோபர் 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் கட்டுநாயக்க இலங்கை விமானப்படை மைதானத்தில் நடைபெற்றதுடன் இங்கு இலங்கை கடற்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கயிறு இழுத்தல் அணிகள் இராணுவ அணிகளுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றன.

29 Oct 2022

12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடர் ஆரம்பமானது

12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்னவின் தலைமையில் 2022 ஒக்டோபர் 19 ஆம் திகதி பனாகொட இராணுவ முகாமின் புதிய உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்துகொண்டார்.

20 Oct 2022

08வது கெரம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கடற்படை வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்

சர்வதேச கெரம் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த (08th Carrom World Championship -2022) போட்டித்தொடர் 2022 அக்டோபர் 03 முதல் 07 வரை மலேசியாவின் லங்காவியில் நடைபெற்றதுடன் இப் போட்டித்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபெற்ற கடற்படை வீரர் நிஷாந்த பெர்னாண்டோ மற்றும் கடற்படை வீராங்கணி ஜோசப் ரோஷிடா ஆகியோர் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

11 Oct 2022

‘Intermediate Boxing Championship – 2022’ இல் கடற்படை பல வெற்றிகளை பெற்றுள்ளது

இலங்கை குத்துச்சண்டை சங்கம் ஏற்பாடு செய்த ‘Intermediate Boxing Championship – 2022 போட்டித்தொடர் 2022 ஒக்டோபர் 05 முதல் 08 வரை கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக குத்துச்சண்டை அரங்கில் நடைபெற்றது, இதில் இலங்கை கடற்படை 02 தங்கப் பதக்கங்கள், 02 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

11 Oct 2022

கட்டளைகளுக்குக் இடையேயான பாய்மரப் படகோட்டம் போட்டித்தொடர் - 2022 திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது

கடற்படை கட்டளைகளுக்குக் இடையேயான பாய்மரப் படகோட்டம் போட்டித்தொடர் 2022 ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை திருகோணமலை உள் துறைமுகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதில் ஆண்களுக்கான சாம்பியன்ஷிப்பை ஏவுகணை கட்டளை மற்றும் பெண்களுக்கான சாம்பியன்ஷிப்பை பயிற்சிக் கட்டளை வென்றது.

10 Oct 2022

‘Monsoon Cup - 2022’ கோல்ஃப் போட்டித்தொடரில் கடற்படை வீரர்கள் விருதுகளை வென்றனர்.

இலங்கை விமானப்படையால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'Monsoon Cup - 2022' கோல்ஃப் போட்டித்தொடர் 2022 ஒக்டோபர் 01 ஆம் திகதி திருகோணமலை சைனா ஹார்பர் கோல்ப் மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன், கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி விருதுகளை வென்றனர்.

03 Oct 2022

நேபாளத்தில் நடைபெற்ற 2022 மவுண்ட் எவரெஸ்ட் சர்வதேச திறந்த டேக்வாண்டோ போட்டித்தொடரில் கடற்படை வீராங்கனை நிசன்சலா சந்தமாலி வெள்ளிப் பதக்கமொன்றை வென்றார்

நேபாளத்தின் புகாராவில் (Pokhara) நடைபெற்ற 03வது மவுண்ட் எவரெஸ்ட் சர்வதேச திறந்த டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டித்தொடர் 2022 யில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை தடகள வீராங்கனை நிசன்சலா சந்தமாலி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

28 Sep 2022