Drug Bust News-ta
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் ரூ.31 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் 2025 டிசம்பர் 17 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போக்குவரத்துக்காக தயாராக இருந்த சுமார் நூற்று நாற்பது (140) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒரு கெப் வண்டி (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
18 Dec 2025
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
யாழ்ப்பாணம் நெடுந்தீவின் வெள்ளியாய் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை 2025 டிசம்பர் 14 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் இருபத்தி ஆறு (26) கிலோ மற்றும் தொள்ளாயிரம் (900) கிராம் வெளிநாட்டு கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர்.
14 Dec 2025
மன்னாரில் ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்
மன்னார் பள்ளியமுனை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் 2025 டிசம்பர் 10 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ஆறு (06) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
12 Dec 2025
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ரூ.14 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
யாழ்ப்பாணம் நெடுந்தீவின் வெள்ளை கடற்கரைப் பகுதியில் 2025 டிசம்பர் 07 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 62 கிலோகிராம் மற்றும் 200 கிராம் வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
08 Dec 2025
கல்பிட்டி கடற்கரையில் கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையில் மேலும் ஒரு போதைப்பொருளினை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், கல்பிட்டியின் இப்பந்திவு கடலோரப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது, மூன்று (03) பைகளில் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற டிங்கி படகானது 2025 டிசம்பர் 05 ஆம் திகதி இரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட டிங்கி படகிற்கு உதவுவதற்காக வந்த மற்றுமொரு டிங்கி படகில் இருந்த நான்கு (04) சந்தேக நபர்களுடன், இன்று (2025 டிசம்பர் 06) காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் நடத்தப்பட்ட நிபுணர் பரிசோதனையின் மூலம், அந்தப் பைகளில் 63 கிலோகிராமை விட அதிகமான ஐஸ் மற்றும் 14 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன், இந்த நடவடிக்கை தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.
06 Dec 2025
தெற்கு கடற்கரையின் ஆழ்கடலில் 376 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் ஆறு சந்தேக நபர்களை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையால், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்டனர். பல நாள் மீன்பிடிக் கப்பலும் சந்தேக நபர்களும் 2025 நவம்பர் 20 ஆம் திகதி தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய நிபுணர் பரிசோதனையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 18 பொதிகளில் 261 கிலோகிராமை விட அதிகமான ஐஸ் மற்றும் 115 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், போதைப்பொருள் கையிருப்புடன், ரிவால்வர் வகை மற்றும் பிஸ்டல் வகை 02 துப்பாக்கிகள் மற்றும் 02 மெகசின்களுடன் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை கண்காணிப்பதில் பங்கேற்றனர்.
21 Nov 2025
கல்பிட்டி களப்பில் ரூ.8 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
கல்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் இலங்கை கடற்படை 2025 நவம்பர் 04 அன்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் முப்பத்தெட்டு (38) கிலோகிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன.
05 Nov 2025
பருத்தித்துறையில் 23 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் 2025 நவம்பர் 01 அன்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நான்கு சந்தேக நபர்களான (03) ஆண்கள், (01) பெண் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளுடன் சுமார் நூற்று ஐந்து (105) கிலோகிராம் கஞ்சாவானது கைப்பற்றப்பட்டது.
03 Nov 2025
மேற்கு கடற்கரையின் ஆழ்கடலில் 6 சந்தேக நபர்களையும், 335 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையால், இலங்கையின் மேற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்டனர். போதைப்பொருட்கலை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் படகும் சந்தேக நபர்களும் இன்று (2025 நவம்பர் 02) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய சிறப்பு பரிசோதனையின் போது, கடற்படையால் கைப்பற்றப்பட்ட பதினாறு (16) பொதிகளில் ஐஸ் போதைப்பொருள் சுமார் 250 கிலோகிராமை விட அதிகமான தொகை மற்றும் ஹெராயின் சுமார் 85 கிலோகிராமை விட அதிகமான தொகை இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டதுடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் போதைப்பொருட்களை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.
02 Nov 2025
41 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சாவுடன் வடக்கு கடலில் 02 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் 2025 அக்டோபர் 30 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எண்பத்தைந்து (185) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கியுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி (01) ஆகியன கைப்பற்றப்பட்டன.
31 Oct 2025


