இலங்கை கடற்படை, 2025 டிசம்பர் 06 முதல் 15 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இருபத்தைந்து (25) நபர்களையும் பதின்மூன்று (13) டிங்கி படகுகளையும் கைப்பற்றியதுடன். மேலும், யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட முப்பத்தாறு (36) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒரு (01) சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.